சென்னை மண்ணடியில்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்துக்கு சீல் வைக்கச்சென்ற அதிகாரிகள்..!
சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் சீல் வைக்க வந்ததால் சென்னை மண்ணடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் சென்னை மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன் காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர்.
காவல்துறைக்கு பதிலடியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரும் பெருமளவில் திரண்டுவிட்டனர்.

அரண்மனைக்காரன் தெரு
சென்னை மண்ணடியில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் ஆன்மிக சொற்பொழிவுகள், தர்ஹா வழிபாடுகளுக்கு எதிரான பிரச்சாரங்கள், உள்ளிட்ட பல செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கடும் எதிர்ப்பு
இந்த அமைப்பில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான நபர்கள் உறுப்பினர்களாகவும், தன்னார்வலர்களாகவும் இருக்கிறார்கள். இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் எதிரி நாட்டு சொத்து கட்டுப்பாட்டு குழு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்தை சீல் வைப்பதற்காக மண்ணடிக்கு சென்றது. இதற்கு அந்த அமைப்பின் நிர்வாகிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன் நூற்றுக்கணக்கான நிர்வாகிகளும் அலுவலக வாசல் முன்பு திரண்டனர்.

காவல்துறை
இதையடுத்து வட்டாட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் நிகழ்விடத்துக்கு அழைக்கப்பட்டு விளக்கம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் அலுவலகத்தை சீல் வைக்க விடமாட்டோம் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் உறுதியாக நின்றனர். மேலும், மூன்று மணி நேரத்துக்குள் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து நிர்வாகிகளும், தன்னார்வலர்களும் சென்னை மண்ணடியில் குவியத் தொடங்கினர்.

பெரும் பதற்றம்
போலீஸ் தரப்பில் பதிலுக்கு ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இது குறித்த தகவல் அரசு உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்காலிகமாக சீல் வைக்கும் நடவடிக்கையை கைவிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications