தலைமேல் கடன்! எவ்ளோ பெரிய ஹோட்டல்.. சரவணபவனுக்கு “சிக்கல்” - ரூ.40 கோடியாம் - சென்னை நிலம் “ஜப்தி”
சென்னை: வங்கியில் கடனாக பெற்ற ரூ.25 கோடி பணத்தை செலுத்தாத காரணத்தால் பிரபல தனியார் உணவகமான சரவணபவனுக்கு சொந்தமான நிலத்தை அதிகாரிகள் ஜப்தி செய்து இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் பிரபல சைவ உணவகங்களில் சரவணபவனுக்கு எப்போதும் ஒரு தனி பெயர் உண்டு. சென்னை தொடங்கி தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும், வெளிநாடுகளிலும் சரவணபவன் உணவகத்தின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
சென்னை கோயம்பேடு அருகே ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை ஓரம் சரவணபவன் நிறுவனத்துக்கு சொந்தமாக 7.5 கிரவுண்ட் நிலம் அமைந்து இருக்கிறது.

வங்கி கடன்
இந்த நிலத்தை வைத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பொதுத்துறை வங்கியில் ரூ.25 கோடியை கடனாக பெற்றது சரவணபவன். பல ஆண்டுகளாகியும் வங்கியில் பெற்ற கடனுக்கான வட்டியையும் அசலையும் சரவணபவன் நிறுவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

நீதிமன்றம் உத்தரவு
இதன் காரணமாக சரவணபவன் உணவகம் மீது பொதுத்துறை வங்கியின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சரவணபவன் உணவகம் வாங்கிய கடனை மீண்டும் செலுத்தாததால் அதற்க்கு சொந்தமான நிலத்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டனர்.

நோட்டீஸ்
நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கிய சரவணபவன் நிர்வாகமும் இதுவரை வங்கியில் வட்டியும் செலுத்தாததால் தற்போது திருப்பி செலுத்த வேண்டிய தொகை ரூ.40 கோடி வரை அதிகரித்து இருக்கிறது. எனவே நீதிமன்ற உத்தரவுப்படி அந்த ஹோட்டலுக்கு சொந்தமான நிலத்தை ஜப்தி செய்யப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கறிஞர்களும் நீதிமன்ற ஊழியர்களும் அறிவித்துவிட்டு சென்றனர்.

நிலம் ஜப்தி
ஆனாலும் ஹோட்டல் நிர்வாகம் வட்டியை செலுத்தாததால் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்த வங்கி ஊழியர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் சரவண பவன் உணவகத்தின் இடத்திற்கு வந்தனர். அப்போது அந்த இடத்தை ஹோட்டல் நிர்வாகம் தனியாருக்கு வாடகைக்கு விட்டிருந்தது தெரியவந்தது.

வடமாநில தொழிலாளர்கள்
அந்த இடத்தில் வட மாநில தொழிலாளர்கள் பலர் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களை வெளியேற்றிய அதிகாரிகள் சரவணபவன் ஹோட்டல் இடத்தில் இருந்த பொருட்களை ஜப்தி செய்து அந்த இடத்தை மூடி சீல் வைத்து விட்டு சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications