Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையை உலுக்கிய 5 அர்ச்சகர்கள் மரணம்.. கடைசி 5 நிமிடத்தில் நடந்தது என்ன? வெளியான வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நங்கநல்லூர் அருகே தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில், பெரிய விபரீதம் நடந்துள்ளது. சுவாமியை குளத்தில் இறக்கிய போது 5 அர்ச்சகர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கடைசி ஐந்துநிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்து வீடியோ வெளியாகி உள்ளது. அந்த காட்சிகள் குறித்து பார்ப்போம்.

சென்னை நங்கநல்லூர் அருகே தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் உயிரிழந்த ஐந்து அர்ச்சகர்களும் 15 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவர். சூர்யா,(24), ராகவ் ((22), ராகவன் (18), யோகேஸ்வரன் (23), வணேஷ் (20) உள்பட ஐந்துபேரின் உடல்கள் மீட்கப்பட்டு, ஐந்து உடல்களும் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விபத்து நடந்த மூவரசம்பட்டு தர்மலிங்கேஸ்வரர் கோயில் குளம் பகுதியில் சென்னை மாநகர கமிஷ்னர் சங்கர் ஜிவால் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பலர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். சுமார் 25 அடி ஆழம் கொண்ட இந்த குளத்தில் சேறு அதிகமாக இருந்துள்ளது.

குளத்தில் குளித்தனர்

குளத்தில் குளித்தனர்

தீர்த்தவாரி நிகழ்ச்சியில் அர்ச்சர்கள் அனைவரும் சாமியை குளத்தில் குளிப்பாட்டினர். பின்னர் குளத்து நீரில் மூழ்கி எழுந்தனர். குளத்தில் மூழ்கி எழுந்திருக்கும் போது, மூன்று முறை எழுந்திருக்க வேண்டும். அப்படி எழுந்திருக்கும் போது மூன்றாவது முறை எழ முயன்ற போது ஒருவருக்கு கால் மாட்டியிருக்கிறது.

கால் சிக்கியது

கால் சிக்கியது

அந்த அர்ச்சகரை மீட்க செல்லும் போது தான், அடுத்தடுத்து 4 பேர் நீரில் மூழ்கி உள்ளனர்.ஒட்டுமொத்தமாக நீரில் அடுத்தடுத்து ஐந்து அர்ச்சர்கள் தண்ணீரில் உள்ள சேரில் சிக்கி நீந்த முடியாமல் உயிரிழந்தனர். கடைசி ஐந்து நிமிடத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக வீடியோவும் வெளியாகி உள்ளது. வீடியோவில் அர்ச்சகர்கள் குளத்தில் ஒருவருக்கு ஒருவர் கையை கோர்த்தபடி,தண்ணீரில் மூழ்கி எழுந்திருக்கிறார்கள்.

ஐந்து பேர் உயிரிழப்பு

ஐந்து பேர் உயிரிழப்பு

அப்போது ஒருவர் தண்ணீரில் மூழ்குகிறார். பின்னாலேயே சிலர் அவரை காப்பாற்ற முயலுகிறார்கள். அவர்களும் நீரில் மூழ்குகிறார்கள். சுற்றி இருந்த அர்ச்சகர்கள் என்ன நடக்கிறது என்பதை உணருவதற்கு உள்ளாகவே ஐந்து பேர் மூழ்கி விடுகிறார்கள்.அதன் பின்னர் உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து மீட்டுள்ளனர்.

இரண்டாவது முறை

இரண்டாவது முறை

இந்த சம்பவத்தால் பெரும் சோகம் அடைந்த பக்தர்கள் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்களும் நேரில் வந்து முழு விசாரணையும் நடத்தினர். காலை 6.30 மணிக்கு இதேபோல் நீரில் மூழ்கி தீர்த்தவாரி நடந்துள்ளது. அப்போது பிரச்சனையாகவில்லை. ஆனால் காலை 9.30மணிக்கு தான் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் நங்கநல்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+