Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போட்டியில் இருந்த 2 பேர்.. விரும்பாத திமுக? திடீரென வந்த சுதா.. மயிலாடுதுறையில் காங்கிரஸ் சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: பெரும் இழுபறிக்கு பிறகு மயிலாடுதுறை தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். மயிலாடுதுறை லோக்சபா தொகுதி வேட்பாளராக ஆர் சுதா என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதற்கான போட்டியில் மேலும் 2 பேர் இருந்த நிலையில் ஆர் சுதா சர்ப்ரைஸ் வாய்ப்பை பெற்றுள்ளார்.

தமிழகத்தின் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் காங்கிரஸ் சார்பாக அறிவிக்கப்பட்டனர். திருவள்ளூர் தனி தொகுதியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கிருஷ்ணகிரி தொகுதியில் கே கோபிநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கரூர் தொகுதியில் மீண்டும் ஜோதிமணி எம்பிக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது.

கடலூர் தொகுதியில் டாக்டர் எம்கே விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். சிவகங்கையில் மீண்டும் கார்த்தி சிதம்பரம் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். விருதுநகரில் மீண்டும் மாணிக்கம் தாகூர் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

How did Congress choose R Sudha as their Mayiladurai candidate for Lok Sabha elections

கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் எம்பி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இரவோடு இரவாக அறிவிப்பு; இதையடுத்து மறுநாளே நெல்லை தொகுதியில் ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டி யிடுவதாக அறிவிக்கப்பட்டார். விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் டாக்டர் தாரகை வேட்பாளராக அறிவிப்பு வெளியானது.

மயிலாடுதுறை ஏன் தாமதம்: மயிலாடுதுறை மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நாளையொடு வேட்புமனு முடியும் நிலையில் பெரும் இழுபறிக்கு பிறகு மயிலாடுதுறை தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். மயிலாடுதுறை லோக்சபா தொகுதி வேட்பாளராக ஆர் சுதா என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இதை காங்கிரஸ் இவ்வளவு நாள் அறிவிக்காமல் இருக்க சில காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அங்கே அறிவிக்கப்பட இருந்த வேட்பாளரை திமுக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. திமுகவின் முழு விருப்பத்தோடு மட்டுமே வேட்பாளர்களை அறிவிக்க ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரவீன் சக்ரவர்த்தியை நியமிக்க காங்கிரஸ் நினைத்தது. இவர் ராகுலு நெருக்கம். ஆனால் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரவீன் சக்ரவர்த்தியை காங்கிரஸ் கைவிட்டது. இதோடு இல்லாமல் அந்த நபர் உள்ளூர் கிடையாது . அவர் வெளியூர் என்பதால் மயிலாடுதுறை காங்கிரஸ் நிர்வாகிகளும் அவரை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

நாசே ராமச்சந்திரன் என்பவரும் முன்னிலையில் இருந்தாலும் அவருக்கு உள்ளூர் அனுதாபிகள் அதிகம் இல்லை.

திடீர் அறிவிப்பு; கடைசியில் மயிலாடுதுறை லோக்சபா தொகுதி வேட்பாளராக ஆர் சுதா என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். இங்கே வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்ததால் திமுக தரப்பிற்கு பிரஷர் அதிகரித்தது. காரணம் திமுக அமைச்சர்கள், முதல்வர் தொகுதி வாரியாக பிரசாரம் செய்ய தொடங்கிவிட்டனர்.,

வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர். அப்படி இருக்க காங்கிரஸ் தொகுதிகளில் கூட கை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர். ஆனால் காங்கிரஸ் மட்டும் இங்கே வேட்பாளரைஅறிவிக்காமல் இருந்தது.

நாளையொடு வேட்புமனு முடிய உள்ள நிலையில் இது திமுகவிற்கு பிரஷரை அதிகப்படுத்தியது. அதோடு வேட்பாளரை வேகமாக அறிவித்தால்தான் பிரச்சாரம் செய்ய முடியும் என்பதால் அழுத்தம் கூடியது. திமுக தந்த பிரஷர், தொண்டர்கள் கேட்ட கேள்வி என்று பல காரணங்கள் காரணமாக இன்று இரவோடு இரவாக காங்கிரஸ் திடீரென மயிலாடுதுறை வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+