Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷாக்.. சென்னையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்தது எப்படி? வெளியான அதிர்ச்சி தகவல்! பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் இன்று இரவில் திடீரென பெட்ரோல் பங்க்கின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் ஒரு பலியாகி உள்ள நிலையில் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் தான் விபத்து எப்படி நடந்தது என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் கனமழை பெய்து வந்தது.

How did the roof of the petrol station collapse at Saidapet in Chennai? details here

மழைக்கு நடுவே பெட்ரோல் பங்க்கில் ஊழியர்கள் வழக்கம்போல் வேலை செய்தனர். சில வாகன ஓட்டிகள் அங்கு ஒதுங்கி நின்றனர்.

இந்நிலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் பெட்ரோல் நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தன. இதனால் அதன் அடியில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.

அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 7 பேர் மீட்கப்பட்டனர். இதில் 4 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், 3 பேர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் ஒருவர் இறந்துள்ளார். மற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தான் பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இன்று சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த பலத்த காற்றுக்கு மேற்கூரையால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் திடீரென்று ஒரு நொடியில் மேற்கூரை சரிந்து விழுந்துள்ளது.

How did the roof of the petrol station collapse at Saidapet in Chennai? details here

இதுமட்டுமின்றி விபத்துக்கு இன்னொரு விஷயமும் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அதாவது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் விபத்து குறித்த அளித்த பேட்டியில், ‛‛பெட்ரோல் பங்க்கின் மேற்கூரையை 2 தூண்கள் தான் தாங்கி இருந்துள்ளன. அதோடு அந்த மேற்கூரை அமைத்து 16 ஆண்டுகள் ஆகிறது'' என்றார். இதன்மூலம் மேற்கூரை 2 தூண்களால் தாங்கி இருந்ததும் இன்னொரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மாறாக கூடுதல் தூண்களுடன் மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்தால் ஒருவேளை விபத்து நிகழாமல் இருந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+