Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.480 கோடி அபராதம் கட்டி சென்னை போயஸ் கார்டன் புது பங்களாவை மீட்ட சசிகலா-கிரகப்பிரவேச குஷி பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை விதித்த அபராதத் தொகை ரூ.480 கோடியை கட்டித்தான் தற்போது கிரகப்பிரவேசம் நடத்தியிருக்கும் சென்னை போயஸ் கார்டன் பங்களாவை மீட்டுள்ளார் சசிகலா என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.

ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தவர் சசிகலா. சிறையில் இருந்து விடுதலையாகி 4 ஆண்டுகளாகிறது. . ஆனால் சசிகலா எந்த ஒரு தீவிர அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. சிறைக்கு போவதற்கு முன்னர் ஓபிஎஸ்ஸை ஒழிப்பேன் என சபதம் போட்டார் சசிகலா. இப்போது ஓபிஎஸ், சசிகலா, தினகரன் மூவரும் இணையும் புள்ளிகளாக இருக்கின்றனர்.

How Sasikala Recover Chennai Poes Garden New Bungalow From ED?

ஒரே பல்லவி: 4 ஆண்டுகளாகவே, ஒவ்வொரு முறை செய்தியாளர்களை சந்திக்கும் போதும் அண்ணா திமுகவை ஒருங்கிணைப்பேன்; என்னால் முடியும்; அதிமுக ஒருங்கிணைந்துவிட்டால் திமுகவால் 1 சீட் கூட ஜெயிக்க முடியாது என ஆவேசம் மட்டும் காட்டுகிறார் சசிகலா. ஆனால் ஆக்‌ஷன் எதுவுமே இல்லை என்பதால் சசிகலாவை சுற்றியிருந்த கூட்டம் மொத்தமாகவே விலகிவிட்டது.

கொடநாடு விசிட்: இந்த நிலையில் திடீரென சசிகலா, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் பங்களா சென்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல் முறையாக 7 ஆண்டுகள் கழித்து கொடநாடு எஸ்டேட் பங்களா சென்றார் சசிகலா. அத்துடன் கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவின் நினைவிடம், உருவசிலை அமைப்பது ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் 7 ஆண்டுகளில் முதல் முறையாக திடீரென கொடநாடு எஸ்டேட் செல்லும் சசிகலா!

சென்னை புது பங்களா: இதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு நேர் எதிரே பிரம்மாண்டமாக கட்டப்பட்ட புது பங்களாவுக்கு கிரகப்பிரவேசம் நடத்தி குடியேறிவிட்டார் சசிகலா. புது பங்களா நிகழ்ச்சியில் அவ்வளவு மகிழ்ச்சியாக காணப்பட்டார் சசிகலா. இனி அரசியல் ஆட்டங்களை சசிகலா அதிரடியாக ஆரம்பிப்பார் எனவும் கூறப்படுகிறது.

How Sasikala Recover Chennai Poes Garden New Bungalow From ED?

சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம் கிரகப்பிரவேசம்- ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே!

ரூ480 கோடி அபராதம்: இது தொடர்பாக சசிகலா தரப்புக்கு நெருக்கமான வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ10 கோடி. அதேசமயம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, சசிகலா தொடர்பான ரூ1,520 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி வைத்த அமலாக்கத்துறை, விதித்த அபராத தொகை ரூ480 கோடி. இந்த ரூ480 கோடி அபராதத் தொகையை அண்மையில்தான் கட்டினாராம் சசிகலா. இதனையடுத்தே இதுவரை முடக்கப்பட்ட அத்தனை சொத்துகளும் விடுவிக்கப்பட்டுவிட்டனவாம். அதில் ஒன்றுதான் போயஸ்கார்டனில் ஜெயலலிதா இல்லத்துக்கு எதிரே புதிதாக கட்டிமுடிக்கப்பட்டு இன்று கிரகப்பிரவேசம் நடத்தப்பட்ட பங்களாவுமாம். ஒருவழியாக அத்தனை சிக்கல்களையும் தீர்த்துவிட்ட சசிகலா இனி தீவிர அரசியலில் முழு வீச்சாக இறங்குவார் என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+