ஜெயலலிதா மறைவுக்கு பின் 7 ஆண்டுகளில் முதல் முறையாக திடீரென கொடநாடு எஸ்டேட் செல்லும் சசிகலா!
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல் முறையாக அதாவது 7 ஆண்டுகள் கழித்து நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு செல்கிறார் சசிகலா. கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 3 நாட்கள் சசிகலா தங்க உள்ளார். கொடநாடு எஸ்டேட் முன்பாக ஜெயலலிதா சிலை அமைப்பதற்கான பூமி பூஜையில் நாளை சசிகலா பங்கேற்கிறார்.
நீலகிரி மாவட்டம் கொடநாடு தேயிலை தோட்டமும் அந்த பங்களாவும் சரித்திரங்களையும் மர்மங்களையும் கொண்டதாகவே இருந்து வருகிறது. ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்து அரசு நிர்வாகத்தை நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது உண்டு. 2016 சட்டசபை தேர்தலின் போது கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவும் சசிகலாவும் தங்கி இருந்தனர். அதன் பின்னர் 2016 டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் காலமானார்.

2017-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகள் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் சிறை தண்டனை அனுபவித்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் சசிகலா சிறையில் இருந்த போதும் அதிமுகவில் ஏராளமான பிரளயங்கள் வெடித்தன.
2017-ம் ஆண்டு சசிகலா சிறையில் இருந்த போது கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன. இன்னமும் கொடநாடு எஸ்டேட் கொலை- கொள்ளை மர்மங்கள் விலகாலம் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. கொடநாடு கொலை- கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வரும் இன்றைய அண்ணா திமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை நோக்கியும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விவகாரத்தில் சசிகலாவும் விசாரணை வளையத்தில் இருந்து வருகிறார்.
2020-ம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையானது முதலே அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என பலநூறு முறை சசிகலா அறிவித்து கொண்டே இருக்கிறார். 2021 சட்டசபை தேர்தலும் முடிந்து 2024 லோக்சபா தேர்தலும் நெருங்கிவிட்ட நிலையிலும் ஆக்டிவ் அரசியலில் சசிகலா இறங்கவே இல்லை.
இந்த பின்னணியில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதாவது 7 ஆண்டுகள் கழித்து திடீரென சசிகலா கொடநாடு எஸ்டேட் செல்கிறார். கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இன்று முதல் 3 நாட்கள் சசிகலா தங்க உள்ளார். கொடநாடு எஸ்டேட் பங்களா முன்பாக ஜெயலலிதாவுக்கு சிலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நாளை காலை நடைபெறுகிறது. இதில் சசிகலா பங்கேற்க உள்ளார். சசிகலாவின் கொடநாடு எஸ்டேட்டுக்கான திடீர் பயணம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications