விஜய் உடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு.. கூட யாருன்னு பாருங்க..!
தூத்துக்குடியில் ரூ.38,000 கோடி முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டுமானத் தொழிற்சாலையை அமைக்க தென் கொரியாவின் புகழ்பெற்ற ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 15,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முக்கிய திட்டம் தொடர்பாக ஹூண்டாய் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இன்று முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தென் கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் HD கொரியா கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் பொறியியல் நிறுவனம் (HD KSOE), தூத்துக்குடியில் உலகத் தரத்தில் கப்பல் கட்டும் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து முதல் கட்ட ஒப்புதல் ஏற்கனவே கிடைத்துள்ளது.

இந்தத் தொழிற்சாலை, தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் மற்றும் வி.ஓ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் ஆகியவற்றின் இணை முயற்சியாக அமையவுள்ளது. இது தமிழ்நாட்டின் தொழில்துறை வரலாற்றில் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இன்று (ஜூன் 17) சென்னை தலைமைச் செயலகத்தில், ஹூண்டாய் நிறுவனத்தின் உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் யங் ஹூன் குவான் தலைமையிலான உயர்மட்டக் குழு முதலமைச்சர் விஜயை சந்தித்து விரிவாகக் கலந்துரையாடியது. இந்தச் சந்திப்பில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவும் கலந்து கொண்டார்.
இந்தத் திட்டத்தின் முன்னேற்றம், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் விரிவாக ஆலோசித்தனர். இந்தச் சந்திப்பு, திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான முக்கிய படியாக பார்க்கப்படுகிறது.
அமைச்சர் கீர்த்தனாவின் கொரியா பயணம் பலன்
தமிழ்நாட்டிற்கு உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் தென் கொரியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். அப்போது ஹூண்டாய் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து இந்தத் திட்டம் குறித்து விரிவாகப் பேசினார்.
அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாகவே, இன்று ஹூண்டாய் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் சென்னைக்கு வந்து முதலமைச்சரை நேரில் சந்தித்துள்ளனர். இது தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கான புதிய அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
15,000 பேருக்கு வேலைவாய்ப்பு
இந்த ரூ.38,000 கோடி மதிப்பிலான கப்பல் கட்டுமானத் திட்டம் செயல்படத் தொடங்கினால், நேரடியாக சுமார் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொடர்புடைய தொழில்களில் ஆயிரக்கணக்கானோருக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
இந்தத் திட்டம், தூத்துக்குடி மாவட்டத்தின் தொழில்துறை வளர்ச்சியை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கப்பல் கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கும் பெரும் உத்வேகத்தை அளிக்கும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் வகையில், தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும் என்று முதலமைச்சர் விஜய் உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
திமுக ஆட்சியில் தேவையில்லாத திட்டங்கள் எதுவுமில்லை.. அமைச்சர் மரிய வில்சன் சொன்ன வார்த்தை! -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
தவெக அரசுக்கு எதிராக நூதன போராட்டம்... முதல்வருக்கு பார்சலில் அனுப்பிய ஹியரிங் எய்டு! -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்!











Click it and Unblock the Notifications