நான் ஒன்றும் தேவதூதனெல்லாம் இல்லை! டிடிவி தினகரனுக்கு முதல்வர் விஜய் பதிலடி!
சென்னை: நான் ஒன்றும் தேவதூதன் எல்லாம் இல்லை, சாதாரண ஒரு வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனுஷன் என முதல்வர் விஜய் பதிலடி கொடுத்துள்ளார். டிடிவி தினகரன், விஜய்யை தேவதூதன், பரமபிதா என அழைத்த நிலையில் விஜய் பதிலடி கொடுத்தார்.
மன்னார்குடி எம்எல்ஏ காமராஜிடம் குதிரை பேரம் நடந்ததாக குற்றம்சாட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "காமராஜ் கொடுத்த ஆதரவு கடிதத்தை காட்டுங்கள்.

இல்லாவிட்டால் காரில் அமர்ந்து அவர் கையெழுத்திட்டிருக்கும் வீடியோவையாவது காட்டுங்கள். இந்த விஷயத்தை நாங்கள் சும்மா விட போவதில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இப்படி போர்ஜரி செய்தால் எப்படி என தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் மேலும் விமர்சிக்கையில், விஜய் ஆட்சி அமைப்பதற்கே இத்தனை போர்ஜரியை விஜய் செய்கிறார் என்றால் விஜய் தமிழகத்தை ஆட்சி செய்தால் பேரழிவு நடக்கும்.
108 சீட்களைதான் தவெகவிற்கு தமிழக மக்கள் கொடுத்துள்ளனர். மீதமுள்ள 126 சீட்களை எதிர்க்கட்சிகளுக்கு கொடுத்துள்ளனர். உங்கள் தேவதூதர் ஒரு கோடி வாக்குகளைத்தான் வாங்கியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க நாங்கள் யாரையும் காரில் உட்கார வைத்து கையெழுத்து வாங்க மாட்டோம். அந்த தூயசக்தியிடமே , பரமாத்மாவே நீங்கள் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆதரவு தாருங்கள் என்றுதான் கேட்போம். எனவே தேவதூதரே எங்களுக்கு இருப்பது ஒரே ஒரு எம்எல்ஏ, அவரை விட்டுவிடுங்கள் என தினகரன் கலாய்த்திருந்தார்.












Click it and Unblock the Notifications