போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா!
சென்னை: தனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டாம் எனவும் தனியார் பாதுகாப்பை வைத்துக் கொள்வதாகவும் ஜெ.தீபா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
தீபா, தீபக்கிற்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறை தயாராக உள்ளதாகவும் ஆனால் இருவரும் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்தது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு விசாரித்தது. ஜெயலலிதாவின் சகோதரர் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக்கை ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவித்து, ரூ.188 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை அவர்களுக்கு ஐகோர்ட்டு வழங்கியது. மேலும், தீபா, தீபக் சொந்த செலவில் தமிழக அரசு இருவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி,எம்.எஸ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் தீபா, தீபக்கிற்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறை தயாராக உள்ளது.
அதற்கான முன்பணமாக இருவரும் சேர்ந்து 6 மாதத்திற்கு 20 லட்சத்து 83 ஆயிரத்தை செலுத்துமாறு காவல்துறை ஆணையர் சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பே இருவருக்கும் கடிதம் அனுப்பியும் அவர்கள் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.
அப்போது தீபக் தரப்பில் ஆஜரான வக்கீல், காவல்துறை கடிதத்துக்கு பதில் அளிக்க இருப்பதாக தெரிவித்த நிலையில்,தீபா தரப்பில் ஆஜரான வக்கீல் தீபாவுக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டாமெனவும், தனியார் பாதுகாப்பை அமர்த்தி கொள்வதாகவும் நீதிபதிகளிடம் தெரிவித்தார். இருதரப்பு வாதத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications