ஒரு சொத்தை பத்திரப்பதிவு செய்துட்டா மட்டும்.. அது உங்களுக்கு சொந்தமாகிவிடுமா? வேறு என்ன செய்யணும்?
சென்னை: ஒரு வீட்டையோ, நிலத்தையோ, கடையையோ உங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ததும் சொத்து உங்களுடையதாகிவிடுமா?
இந்தியாவில் நிலங்களை பதிவு செய்வது என்பது கட்டாயமானதாகும். இது போல் பத்திரங்களை பதிவு செய்வதற்கு பத்திரப்பதிவு துறை இருக்கிறது. இந்திய பதிவு சட்டத்தின்படி 100 ரூபாய்க்கு மேல் எந்த ஒரு சொத்தை எந்த விதத்தில் மாற்றினாலும் அது எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட துணை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அதனால்தான் வீடு, கடை, பிளாட், அல்லது பண்ணை என எது வாங்கினாலும் அது கட்டாயம் பதிவு செய்யப்படுகிறது. ஒரு சொத்தை வாங்குவதற்கு முன்பு அதில் ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

அதன் பிறகு அந்த சொத்துக்கு எத்தனை உரிமையாளர்கள் இருக்கிறார்கள், அதன் மீது ஏதேனும் கடன் பெறப்பட்டிருக்கின்றனவா, மூல பத்திரம் உரிமையாளரிடம் இருக்கிறதா, இல்லாவிட்டால் வங்கியில் மூலபத்திரத்தை அடமானம் வைத்து பணம் பெறப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். அதுதான் ஒரு சொத்தை பிறரிடம் இருந்து வாங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.
இதில் ஏதாவது ஒன்று நமக்கு எதிராக இருந்தாலும் நாம் ஏமாற்றமடைந்துவிட்டோம் என்று அர்த்தம். இதற்காக போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் வாசலை ஏறிக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு எந்த பிரச்சினையும் இல்லை என்றால் அந்த சொத்தை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பத்திரப் பதிவு செய்தாலும் நீங்கள் அதன் உரிமையாளராகிவிட முடியாது.
ஒரு நபர் ஒரு சொத்தை இரண்டு முறை விற்றதாக தினமும் இது போன்ற செய்திகள் வருவதற்கு இதுவே காரணம். அல்லது விற்கப்பட்ட சொத்தின் மேல் விற்பனையாளர் நிலத்தில் கடன் வாங்கியிருக்கலாம். நிலத்தை வாங்குபவர் பதிவை மட்டுமே செய்திருப்பதால் இது நிகழ்கிறது. அவர் தனது பெயரில் சொத்தை மாற்றி எழுதவில்லை (இது சொத்து மாற்றம் என அழைக்கப்படுகிறது).

பதிவு மட்டும் செய்வதன் மூலம் அந்த சொத்தின் முழு உரிமையும் உங்களுக்குக் கிடைக்காது. பதிவு என்பது உரிமையை மாற்றுவதற்கான ஒரு ஆவணம் மட்டுமே. பத்திரபதிவை முடித்த பிறகு அந்த பதிவின் அடிப்படையில் நீங்கள் சொத்தை மாற்றினால் அது சொத்து மாற்றம் என்பதாகும். எனவே நீங்கள் ஏதேனும் சொத்து வாங்கினால் பதிவு மட்டும் செய்துவிட்டு அப்படியே இருக்காதீர்கள். சரியான நேரத்தில் சொத்து மாற்றம் செய்யப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதன் மூலம்தான் நீங்கள் அந்த சொத்தின் உரிமையாளராக முடியும்.
பதிவு செய்ய பிறகு நியமனம் அல்லது தாக்கல் நிராகரிக்கப்பட்டால் சொத்தை வாங்குபவர் அதன் உரிமையாளராகி சொத்து தொடர்பான அனைத்து உரிமைகளும் அவருக்கு வந்து சேரும். சொத்து மாற்றம் செய்யும் போது பதிவின் அடிப்படையில் அந்த சொத்தின் உரிமையின் அதிகாரப்பூர்வ பதிவில் உங்கள் பெயர் சேர்க்கப்படும்.
நிராகரிக்கப்பட்டால் முந்தைய உரிமையாளரின் பெயர் உரிமைப் பதிவுகளில் இருந்து அகற்றப்பட்டது என்பது அர்த்தமாகும். தாக்கல் மற்றும் நிராகரிப்புக்கான விதிகள் மற்றும் நேரங்கள் வெவ்வேறு மாநிலங்களில் வேறுபடுகின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே பத்திரப்பதிவு குறித்து அனைத்து விஷயங்களையும் நன்கு தெரிந்து கொண்டு சொத்துகளையோ, நிலங்களையோ வாங்கலாம். இந்த விவகாரத்தில் இடைத்தரகர்கள் என கூறுவோரை நம்பி ஏமாற வேண்டாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications