Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் வெடிக்கும் சென்னை ஐஐடி மர்ம மரணங்கள் விவகாரம்.. மணி கட்டப் போவது யாராம்? எப்போதாம்?

சென்னை ஐஐடியில்தான் நாட்டிலேயே அதிக மாணவர்கள் மரணம் அடைந்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டின் ஐஐடி கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தொடர்ந்து மரணமடைவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி (ஐஐடி மெட்ராஸ்) கல்வி நிறுவனத்தில் ஒரே மாதத்தில் 2-வது மாணவர் தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உயர் கல்வி நிறுவனங்களில் ஐஐடி முதன்மையான இடத்தில் உள்ளது. ஆனால் ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஜாதி, மத ஒடுக்குமுறைகள் தலைவிரித்தாடுகின்றன என்பது குற்றச்சாட்டு.

IIT report more student suicides in recent years- Madras IIT in Top 1

நாட்டின் ஐஐடி கல்வி நிறுவனங்களில் கடந்த சில ஆன்டுகளில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மர்ம மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் மெட்ராஸ் ஐஐடி எனப்படும் சென்னை ஐஐடியில்தான் அதிகபட்சமாக 15-க்கும் மேற்பட்ட தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஒவ்வொரு மரணமும் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும்தான் உருவாக்குகிறதே தவிர தீர்வு கிடைக்கவில்லை.

2018-ல் கேரளா மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அப்போது வருகை பதிவேடு குறைவு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல உபி மாணவர், முதுகலை தொழில்நுட்பம் படித்தவர். அவரும் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது. இதேபோல் பேராசிரியர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார்.

2019-ல் மாணவி பாத்திமா லத்தீப் மர்ணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவி பாத்திமா மரணத்தில் பேராசிரியர் ஒருவர் பெயர் அடிபட்ட போதும் அவர் மீது நடவடிக்கை பாயவில்லை. நடவடிக்கைகளில் இருந்து தப்பினார். ஒடிஷாவைச் சேர்ந்த சேகர் திவாரி என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

IIT report more student suicides in recent years- Madras IIT in Top 1

2016-ம் ஆண்டு மட்டும் 3 மாணவர்கள், சென்னை ஐஐடி வளாகத்தில் மரணம் அடைந்தனர். இந்த ஆண்டு ஒரே மாதத்தில் 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் சென்னை ஐஐடியில் ஆந்திராவை சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 2023-ம் ஆண்டில் தற்போது வரை 3 மாணவர்கள் சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களிலேயே இத்தகைய மரணங்கள், மர்ம மரணங்கள், தற்கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய கல்வி நிறுவனங்களில் கட்டுப்படுத்தப்பட முடியாத ஜாதிய, மத ரீதியான ஒடுக்குமுறை நீடித்து கொண்டிருக்கிறது. இத்தகைய ஒடுக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்படும் போதுதான் மாணவர்கள், பேராசிரியர்கள் மரணங்கள் விவகாரம் ஓயும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+