Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”தலித்” என்று அழைத்ததால் ஆவேசம்.. வழக்கு தொடர்ந்த இளையராஜா - ஒரு பிளாஷ்பேக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளார் இளையராஜாவை தலித் என மத்திய அரசும் பாஜகவும் அடையாளப்படுத்தி இருக்கும் நிலையில், தன்னை தலித் என்று அழைத்ததற்காக எழுத்தாளர் கே.ஏ.குணசேகரன் மீது இளையராஜா வழக்கு தொடர்ந்தது தற்போது பலரால் நினைவுகூறப்பட்டு வருகிறது.

Recommended Video

    Ilaiyaraaja-வுக்கு MP Post | தலித்! BJP கொடுத்த அறிமுகம்

    இந்தியாவின் மூத்த முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், இந்தி என ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் 7000 க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

    இந்த நிலையில், மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

    பாஜக கொடுத்த அறிமுகம்

    பாஜக கொடுத்த அறிமுகம்

    இந்த நிலையில் பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தலித் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தவர் இளையராஜா. தனது பணியின்போது எண்ணிலடங்காத தடைகளையும், சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளையும் சந்தித்தவர். அனைத்து கஷ்டங்களையும் கடந்து தலைசிறந்த இசையமைப்பாளராக திகழ்கிறார் இளையராஜா.

     தலித் என்ற அடையாளம்

    தலித் என்ற அடையாளம்

    இதேபோல் 4 நியமன எம்.பிக்கள் தொடர்பாக வெளியான அரசு அறிக்கையிலும், பெண் என பிடி உஷாவையும், தலித் என இளையராஜாவையும், ஜெயின் சமுதாயத்தை சேர்ந்தவர் என வீரேந்திர ஹெக்கடேவையும் குறிப்பிட்டு உள்ளனர். இசையுலகின் ஜாம்பவானாக திகழும் இளையராஜாவை குறிப்பிட்ட சாதிக்குள் அடைத்து அதன் அடிப்படையில் எம்.பி. பதவி வழங்குவதா என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

     வழக்கு தொடர்ந்த இளையராஜா

    வழக்கு தொடர்ந்த இளையராஜா

    நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் வென்ற பிரபல நாடக நடிகரும் இயக்குநருமான கே.ஏ.குணசேகரன் தலித் முரசு என்ற இதழில் கடந்த 2001 ஆம் ஆண்டில் இளையராஜா குறித்த கட்டுரைத் தொடரை எழுதினார். "தலித் இசைக் கருவிகளை திரையில் பயன்படுத்திய முன்னோடி" என்று இளையராஜாவை அவர் அதில் புகழ்ந்திருந்தார். தலித் என்று தான் அடையாளப்படுத்துவதை விரும்பாத இளையராஜா கே.ஏ.குணசேகரன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

    புத்தகத்துக்கு தடை

    புத்தகத்துக்கு தடை

    கே.ஏ.குணசேகரன் எழுதிய கட்டுரைத் தொடர் புத்தகமாக தயாரானபோது அது வெளியே வரக்கூடாது என்று கூறி நீதிமன்றத்தில் இளையராஜா தடை ஆணை பெற்றார். இளையராஜாவின் இந்த நடவடிக்கை காரணமாக முற்போக்காளர்கள் அப்போது அவர் மீது விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில் தன்னை தலித் என்று அடையாளப்படுத்தி வழங்கப்படும் எம்.பி. பதவிக்கு இளையராஜா நன்றி கூறி இருப்பதை சுட்டிக்காட்டி பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+