”தலித்” என்று அழைத்ததால் ஆவேசம்.. வழக்கு தொடர்ந்த இளையராஜா - ஒரு பிளாஷ்பேக்
சென்னை: எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளார் இளையராஜாவை தலித் என மத்திய அரசும் பாஜகவும் அடையாளப்படுத்தி இருக்கும் நிலையில், தன்னை தலித் என்று அழைத்ததற்காக எழுத்தாளர் கே.ஏ.குணசேகரன் மீது இளையராஜா வழக்கு தொடர்ந்தது தற்போது பலரால் நினைவுகூறப்பட்டு வருகிறது.
Recommended Video
இந்தியாவின் மூத்த முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், இந்தி என ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் 7000 க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
இந்த நிலையில், மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

பாஜக கொடுத்த அறிமுகம்
இந்த நிலையில் பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தலித் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தவர் இளையராஜா. தனது பணியின்போது எண்ணிலடங்காத தடைகளையும், சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளையும் சந்தித்தவர். அனைத்து கஷ்டங்களையும் கடந்து தலைசிறந்த இசையமைப்பாளராக திகழ்கிறார் இளையராஜா.

தலித் என்ற அடையாளம்
இதேபோல் 4 நியமன எம்.பிக்கள் தொடர்பாக வெளியான அரசு அறிக்கையிலும், பெண் என பிடி உஷாவையும், தலித் என இளையராஜாவையும், ஜெயின் சமுதாயத்தை சேர்ந்தவர் என வீரேந்திர ஹெக்கடேவையும் குறிப்பிட்டு உள்ளனர். இசையுலகின் ஜாம்பவானாக திகழும் இளையராஜாவை குறிப்பிட்ட சாதிக்குள் அடைத்து அதன் அடிப்படையில் எம்.பி. பதவி வழங்குவதா என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

வழக்கு தொடர்ந்த இளையராஜா
நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் வென்ற பிரபல நாடக நடிகரும் இயக்குநருமான கே.ஏ.குணசேகரன் தலித் முரசு என்ற இதழில் கடந்த 2001 ஆம் ஆண்டில் இளையராஜா குறித்த கட்டுரைத் தொடரை எழுதினார். "தலித் இசைக் கருவிகளை திரையில் பயன்படுத்திய முன்னோடி" என்று இளையராஜாவை அவர் அதில் புகழ்ந்திருந்தார். தலித் என்று தான் அடையாளப்படுத்துவதை விரும்பாத இளையராஜா கே.ஏ.குணசேகரன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

புத்தகத்துக்கு தடை
கே.ஏ.குணசேகரன் எழுதிய கட்டுரைத் தொடர் புத்தகமாக தயாரானபோது அது வெளியே வரக்கூடாது என்று கூறி நீதிமன்றத்தில் இளையராஜா தடை ஆணை பெற்றார். இளையராஜாவின் இந்த நடவடிக்கை காரணமாக முற்போக்காளர்கள் அப்போது அவர் மீது விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில் தன்னை தலித் என்று அடையாளப்படுத்தி வழங்கப்படும் எம்.பி. பதவிக்கு இளையராஜா நன்றி கூறி இருப்பதை சுட்டிக்காட்டி பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications