சென்னை கோயம்பேடு விஆர் மாலில் அனுமதியின்றி மதுவிருந்து.. ஆட்டம், பாட்டம் என களைகட்டிய பார்ட்டி
சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள விஆர் மாலில் போலீஸார் அனுமதியின்றி மதுவிருந்து நிகழ்ச்சி நடந்ததை அடுத்து 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் கோயம்பேட்டில் உள்ளது விஆர் மால். இந்த வணிக வளாகத்தில் உணவு கடைகள், துணி கடைகள், நகைக் கடைகள், தியேட்டர்கள் என சகலமும் இருக்கிறது.
இந்த நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நிறைய மக்கள் கூடுவர். அந்த இடமே கூட்ட நெரிசலாக இருக்கும்.

மதுவிருந்து
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றைய தினம் மதுவிருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். DJ Mandragora live in namma chennai எனும் டிஜே நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்த மது விருந்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நிகழ்ச்சியே களைகட்டியது. குடித்துவிட்டு போதை தலைக்கேறியதும் இளைஞர்கள் கூச்சலிட்டனர்.

போலீஸாருக்கு மதுவிருந்து தொடர்பாக புகார்
இந்த நிலையில் இந்த மது விருந்து தொடர்பாக அண்ணாநகர் கலால் துறை போலீஸாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மது விருந்து நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கப்பட்டதற்கான ஆதாரத்தை கேட்டனர். பின்னர்தான் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கவில்லை என தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த இளைஞர்களை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பினர். மேலும் 844 விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.

4 பேர் மீது வழக்குப் பதிவு
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மது அருந்திவிட்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து அனுமதியின்றி நிகழ்ச்சி ஏற்பாடு செய்த விக்னேஷ் சின்னதுரை, மார்க் பாரத், பார் மேனேஜர் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஈசிஆர் ரிசார்ட்
சென்னையில் ஈசிஆர் சாலைகளில் உள்ள ரிசார்ட்களில் பார்ட்டிகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவற்றை போலீஸார் ரெய்டு நடத்தி வழக்குப் பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் ஒரு மாலில் அனுமதியின்றி மது விருந்து நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications