35 ஆண்டுகளாக ஊரை கையில் வைத்திருக்கும் ஒரே குடும்பத்தினர்... வாக்காளர்கள் மனம் மாறாதது எப்படி..?
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை, கடந்த 35 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தினர் மட்டுமே நிர்வகித்து வருகின்றனர்.
புதிது புதிதாக எத்தனையோ வேட்பாளர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிட்டும், அவர்கள் அனைவரையும் ஓரங்கட்டி மனம் மாறாமல் வாக்காளர்கள் அந்த குடும்பத்தினரை மட்டுமே தேர்வு செய்கின்றனர்.
இந்தளவுக்கு ஒரு ஊரே ஆதரவு தருகிறது என்றால், அந்த குடும்பத்தினர் அப்படி என்ன அந்த மக்களுக்கு செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஆவல் எழுகிறது அல்லவா.

செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் ஊராட்சியில் எத்திராஜ் என்பவர் கடந்த 1965-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்திருக்கிறார். இவரது காலத்துக்கு பிறகு கடந்த 1986-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகள் எத்திராஜின் மூத்த மகன் ராஜசேகர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்திருக்கிறார். இதையடுத்து தலைவர் பதவி பெண்கள் கோட்டாவுக்கு மாறியதை தொடர்ந்து தன் வீட்டு பெண்களையே தேர்தலில் போட்டியிட வைத்தார் ராஜசேகர்.

ஊர் தலைவர்
அதன்படி 1996-ம் ஆண்டு தனது மனைவி சரஸ்வதியை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நிறுத்தி அவரை வெற்றி பெறவும் வைத்தார் ராஜசேகர். 2007-ம் ஆண்டு வரை தலைவராக இருந்த சரஸ்வதி காலமானதை அடுத்து, அங்கு நடந்த இடைத்தேர்தலில் எத்திராஜின் இளைய மருமகள், அதாவது ராஜசேகரின் தம்பி ரங்கராஜனின் மனைவி சுஹாசினி தலைவரானார். அவர் கடந்த 2016-ம் ஆண்டு வரை தலைவராக இருந்திருக்கிறார்.

35 ஆண்டுகள்
இதையடுத்து தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் சுஹாசினி ரங்கராஜனே பெரும்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இப்படி 35 ஆண்டுகளாக ஊருக்குள் கொடிகட்டி பறக்கும் எத்திராஜின் குடும்பத்தினரை எதிர்த்து பலர் போட்டியிட்டும் அவர்களில் ஒருவரால் கூட வெல்ல முடியவில்லை.

சொந்த நிதி
அரசு நிதியை மட்டுமே நம்பியில்லாமல் சொந்த நிதியில் ஊருக்கான பணிகளை முன்னெடுப்பது, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எளிதில் அணுக முடிய என்பது எத்திராஜ் குடும்பத்தின் பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. இதனிடையே ஓராண்டு, ஈராண்டு இல்லை, 35 ஆண்டுகளாக ஊர் மக்களின் நன்மதிப்பை ஒரே மாதிரி நிலை நிறுத்தி வைத்திருப்பது பொதுவாழ்க்கையை பொறுத்தவரை பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications