Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

35 ஆண்டுகளாக ஊரை கையில் வைத்திருக்கும் ஒரே குடும்பத்தினர்... வாக்காளர்கள் மனம் மாறாதது எப்படி..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை, கடந்த 35 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தினர் மட்டுமே நிர்வகித்து வருகின்றனர்.

புதிது புதிதாக எத்தனையோ வேட்பாளர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிட்டும், அவர்கள் அனைவரையும் ஓரங்கட்டி மனம் மாறாமல் வாக்காளர்கள் அந்த குடும்பத்தினரை மட்டுமே தேர்வு செய்கின்றனர்.

இந்தளவுக்கு ஒரு ஊரே ஆதரவு தருகிறது என்றால், அந்த குடும்பத்தினர் அப்படி என்ன அந்த மக்களுக்கு செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஆவல் எழுகிறது அல்லவா.

செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் ஊராட்சியில் எத்திராஜ் என்பவர் கடந்த 1965-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்திருக்கிறார். இவரது காலத்துக்கு பிறகு கடந்த 1986-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகள் எத்திராஜின் மூத்த மகன் ராஜசேகர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்திருக்கிறார். இதையடுத்து தலைவர் பதவி பெண்கள் கோட்டாவுக்கு மாறியதை தொடர்ந்து தன் வீட்டு பெண்களையே தேர்தலில் போட்டியிட வைத்தார் ராஜசேகர்.

ஊர் தலைவர்

ஊர் தலைவர்

அதன்படி 1996-ம் ஆண்டு தனது மனைவி சரஸ்வதியை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நிறுத்தி அவரை வெற்றி பெறவும் வைத்தார் ராஜசேகர். 2007-ம் ஆண்டு வரை தலைவராக இருந்த சரஸ்வதி காலமானதை அடுத்து, அங்கு நடந்த இடைத்தேர்தலில் எத்திராஜின் இளைய மருமகள், அதாவது ராஜசேகரின் தம்பி ரங்கராஜனின் மனைவி சுஹாசினி தலைவரானார். அவர் கடந்த 2016-ம் ஆண்டு வரை தலைவராக இருந்திருக்கிறார்.

35 ஆண்டுகள்

35 ஆண்டுகள்

இதையடுத்து தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் சுஹாசினி ரங்கராஜனே பெரும்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இப்படி 35 ஆண்டுகளாக ஊருக்குள் கொடிகட்டி பறக்கும் எத்திராஜின் குடும்பத்தினரை எதிர்த்து பலர் போட்டியிட்டும் அவர்களில் ஒருவரால் கூட வெல்ல முடியவில்லை.

சொந்த நிதி

சொந்த நிதி

அரசு நிதியை மட்டுமே நம்பியில்லாமல் சொந்த நிதியில் ஊருக்கான பணிகளை முன்னெடுப்பது, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எளிதில் அணுக முடிய என்பது எத்திராஜ் குடும்பத்தின் பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. இதனிடையே ஓராண்டு, ஈராண்டு இல்லை, 35 ஆண்டுகளாக ஊர் மக்களின் நன்மதிப்பை ஒரே மாதிரி நிலை நிறுத்தி வைத்திருப்பது பொதுவாழ்க்கையை பொறுத்தவரை பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+