நடுரோட்டில் அலறிய பெண்.. வடபழனி 100 அடி ரோட்டில் திடீரென எரிந்த கார்.. தெறித்து ஓடிய மக்கள்
சென்னையின் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது
சென்னை: பெண் ஒருவர் ஓட்டி வந்த கார் நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் 100 அடி சாலை எப்போதுமே பரபரப்புடன் காணப்படும் பகுதியாகும்.. கோயம்பேடு மேம்பாலம் வந்ததில் இருந்தே, வாகன போக்குவரத்தும் இங்கு அதிகமாக காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒரு எதிர்பாராத விபத்து இந்த சாலையில் ஏற்பட்டுள்ளது.. சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் சில்வியா.. 60 வயதாகிறது.. இவரது மகள் துரைப்பாக்கத்தில் வசித்து வருகிறார்..

கார்
அவரை பார்ப்பதற்காக முகப்பேரில் இருந்து காரை ஓட்டி வந்துள்ளார். மதியம் 12.30 மணியளவில் வடபழனி 100 அடி சாலையில் வந்து கொண்டிருந்தார்.. சூளைமேடு சந்திப்பு அருகே உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டல் எதிர்புறம் வந்தபோது, திடீரென காரின் முன் பக்கத்திலிருந்து புகை வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்..

அலறல்
அதனால் உடனடியாக காரை ஒரு ஓரமாக நிறுத்திய சில்வியா, அலறி அடித்து கொண்டு காரில் இருந்து கீழே இறங்கி வந்தார்.. அடுத்த சில நொடிகளிலேயே அந்த கார் மளமளவென முழுவதுமாக தீப்பற்றி எரியத் தொடங்கியது... அதற்குள் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தகவல் கிடைத்ததுமே கோயம்பேடு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்...

பாதிப்பு
ஆனால், இதில் யாருக்கும் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை... விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. என்றாலும், இந்த சம்பவம் பெரும் பீதியை கிளப்பிவிட்டது.. காரணம், கடந்த ஜூன் மாதம், இதே கோயம்பேடு மேம்பாலத்தில் தான் ஒரு கார் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது..

பரபரப்பு
அப்போது அதில் பயணம் செய்த அர்ஜூனன் என்பவர் காருக்குள்ளேயே தீயில் கருகி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.. காரை ஓட்டிவந்த சுனில் என்ற டிரைவர் தீக்காயத்தால் படுகாயமடைந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று , பிறகு பலனின்றி உயிரிழந்தும் விட்டார்.. ஒரே இடத்தில், ஒரே மாதிரியாக கார் தீப்பற்றி எரியவும், இந்த சம்பவம் கலக்கத்தையும் பரபரப்பையும் தந்துவிட்டது...!












Click it and Unblock the Notifications