போக்சோ வழக்கு.. பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனே முக்கியம்.. விஜய் ஆனந்த் ஜாமீன் மனு ஹைகோர்ட் தள்ளுபடி
சென்னை: போக்சோ வழக்குகளில் தாய், தந்தை மற்றும் உறவினர்களின் நலனை விட பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனே முக்கியம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திரை மறைவில் ஒழிந்து கொண்டு தாம் ஒரு அப்பாவி என மனுதாரர் கூற முடியாது என குறிப்பிட்டுள்ள நீதிபதி விஜய் ஆனந்த்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் டிஜிபியான திலகவதியின் மகன் டாக்டர் பிரபு திலக் மற்றும் அவரது மனைவி ஷ்ருதி ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது 2 குழந்தைகளும் தந்தை வசம் உள்ளனர். விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி, தாய் ஷ்ருதி வீட்டில் இருந்து தனது ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வரச் சென்ற தனது மகளை, ஷ்ருதி திட்டியதாகவும், ஷ்ருதியின் சகோதரர் விஜய் ஆனந்த், பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகவும், பிரபு திலக், வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில் ஷ்ருதிக்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் அவரது சகோதரர் விஜய் ஆனந்துக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதனையடுத்து, தமக்கு முன்ஜாமீன் கோரி மீண்டும் விஜய் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன் பிறப்பித்துள்ள உத்தரவில், வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாக மனுதாரர் தரப்பில் கூறினாலும் இறுதி அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் போலீஸ் விசாரணை தேவைப்படுவதாக கூறியுள்ளார்.
திரை மறைவில் ஒழிந்து கொண்டு தாம் ஒரு அப்பாவி என மனுதாரர் கூற முடியாது என குறிப்பிட்டுள்ள நீதிபதி விஜய் ஆனந்த்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இது போன்ற போக்சோ வழக்குகளில் தாய், தந்தை மற்றும் உறவினர்களின் நலனை விட பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனே முக்கியம் எனவும் முடிவில் அந்த சிறுமியின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டியதே முக்கியம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் முன் ஜாமீன் மறுக்கப்பட்ட விஜய் ஆனந்த் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications