தமிழகத்தில் சரியும் கொரோனா பாதிப்பு... ஆறுதல் அளித்த அறிக்கை..!
சென்னை: தமிழகத்தில் இன்று 597 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 27,41,610 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு முதல் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியா சிக்கி தவித்து வருகிறது. 2020 ஜனவரி மாதம் முதல் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இரு ஆண்டுகளில் மிக தீவிரமான பரவல் காரணமாக ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. அரசியல் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பாதிப்புகளை கொரோனா ஏற்படுத்தியது.
அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நோய் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது 650 இருந்து தற்போது பாதிப்பு குறைந்துள்ளது.

இன்றைய கொரோனா பாதிப்பு
இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,02,947 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 597 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,41,610 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைநதவர்கள் எண்ணிக்கை
தமிழகத்தில் இன்று மட்டும் 681 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,99,309 ஆக உயர்ந்துள்ளது.

7 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனாவால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,714 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 6,798 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் பாதிப்பு
சென்னையில் இன்று 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக கோவையில் 90 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 53 பேர், ஈரோட்டில் 42 பேர், திருப்பூரில் 41 பேர், சேலத்தில் 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications