Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரக்கு மப்பில் டிரைவிங்... புத்தாண்டு தினத்தில் 200 -க்கும் மேற்பட்டோர் மீது வழக்குபதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 263 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெரினா, பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆரவாரமாக புத்தாண்டை வரவேற்றனர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் இளைஞர்கள் நடனமாடியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்தும் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடினர். சில இடங்களில் நடிகர், நடிகைகளின் மேடை நடனங்களும் இடம்பெற்றிருந்தன.

In the New Year Day, over 200 cases were filed

மேலும், சென்னையில் உள்ள பல்வேறு பூங்காக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மனமகிழ் மன்றங்களில் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர். கேக் வெட்டியும் புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்தநிலையில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 263 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல், இருசக்கர வாகனத்தில் விதிகளை மீறி பயணித்ததாக 233 வழக்குகளும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 33 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல், மும்பையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 455 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 1114 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+