அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிதமான மழை.. வானிலை மையம் தகவல்
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது, குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திரக்கடல் வரை தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது.

இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுநிலை தமிழகத்தின் உள்நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும்.
கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதே நேரம் இன்றிலிருந்து, 3 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் இடைவெளிவிட்டு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications