எங்கப்பா இங்கே இருந்த கடற்கரையை காணோம்? தமிழகத்தில் உருப்படியாக இருப்பது 37%.. மிச்சமெல்லாம் மோசம்
சென்னை: தமிழகத்தில் உள்ள 991 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையில் 37 சதவீதம் மட்டுமே சேதமின்றி அப்படியே உள்ளது. எஞ்சியதில் 40 சதவீத கடற்கரையில் மண்அரிப்பாலும், 23 சதவீதம் மண்திட்டாலும் சேதப்பட்டுள்ளது. இதனால் தமிழக கடற்கரையை பாதுகாக்க தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின் அடிப்படையில் புதிய திட்டம் அவசியமாக உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 13கடலோர மாவட்டங்கள் உள்ளன. காவிரி, பாலாறு, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கிய ஆறுகளாக உள்ளன. மொத்தமாக தமிழகத்தில் 991 கிலோமீட்டர் நீளம் கடற்கரை அமைந்துள்ளது.
இயற்கை நிகழ்வு மற்றும் மனித தலையீடுகள் என 2 வழிகளில் கடற்கரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தமிழகத்தில் உள்ள 63 சதவீத கடற்கரை பாதிக்கப்பட்டுள்ளது அறிக்கை ஒன்றின் வழியாக தெரியவந்துள்ளது.

அறிக்கையில் இருப்பது என்ன
புவியியல் அமைச்சகம் மற்றும் தேசிய கடல் ஆராய்ச்சி மையத்தின் தேசிய மதிப்பீட்டின்படி 1990 முதல் 2016 வரையிலான அறிக்கையின்படி தமிழ்நாடு கடற்கரையில் சுமார் 40 சதவீத கரையில் மண்அரிப்பு ஏற்பட்டுள்ளது. 23 சதவீத கரைகள் மேடாக அல்லது திரட்டியாக மாறியுள்ளது. மேலும் கடற்கரையின் 37 சதவீத பகுதிகள் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. கடற்கரையில் ஏற்பட்ட இத்தகைய மாற்றத்துக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் தான் காரணம் என கூறப்படுகிறது.

கடல் அரிப்பால் பாதிப்பு
அதன்படி காஞ்சிபுரம், விழுப்புரம், திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய கடலோரப் பகுதிகள் அரிப்பினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் உள்ள கடற்கரை பகுதிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக மணல் மேடுகளாக உருவாகி உள்ளன. அதாவது மொத்தமுள்ள 991.47 கிலோமீட்டர் தொலைவு கொண்ட தமிழக கடற்கரையில் 14.66 கிலோமீட்டர் அளவுக்கு அதிகளவில் மண்அரிப்பு ஏற்பட்டுள்ளது. 36.65 கிலோமீட்டருக்கு மிதமான மண்அரிப்பும், 355.74 கிலோமீட்டர் அளவுக்கு குறைந்த மண்அரிப்பும் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் 194.27 கிலோமீட்டர் தொலைவுக்கு குறைந்த திரட்சி (கரை உயர்வு அல்லது மண்மேடு), 23.96 கிலோமீட்டருக்கு மிதமாகவும், 12.63 கிலோமீட்டருக்கு அதிகமாவும் திரட்சி ஏற்பட்டுள்ளது. 353.74 கிலோமீட்டர் நீளத்துக்கான கடற்கரையில் எந்த பாதிப்பும் இல்லை.

தென்மாவட்டங்களின் நிலை என்ன
தென்மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி கடல்கள் மட்டும் 514.2 கிமீ நீளமுள்ள கடற்கரையை கொண்டுள்ளது. இது தமிழகத்தின் 52 சதவீத கடலோர பகுதியை கொண்டுள்ள நிலையில் இங்கு தான் கடந்த 30 ஆண்டுகளாக அதிகளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ராமநாதபுரம் கடற்கரை 272.01 கிலோமீட்டர் தொலைவு உள்ள நிலையில் 104.3 கிமீ மண்அரிப்புக்கு உள்ளாகி உள்ளது. 41.77 கிலோமீட்டருக்கு திரட்சி ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி கடற்கரை பகுதி 121.43 கிலோமீட்டர் தொலைவுக்கு விரிந்துள்ள நிலையி்ல 21.8 கிலோமீட்டர் நீளத்துக்கு மண்அரிப்பு ஏற்பட்டுள்ளது. 52. 64 கிலோமீட்டர் தொலைவு திரட்டி அடைந்துள்ளது. 51.70 கிலோமீட்டர் தொலைவிலான திருநெல்வேலி கடற்கரை பகுதியில் 9.40 கிலோமீட்டர் தொலைவுக்கு மண்அரிப்பும், 20.7 கிலோமீட்டருக்கு மண்மேடும் உருவாகி உள்ளது. 69.06 கிலோமீட்டர் நீளமுள்ள கன்னியாகுமரி கடற்கரையில் 44.56 கிமீ தூரம் மண்அரிப்பாலும், 6.64 கிமீட்டர் தூரம் மண்மேடாகவும் உள்ளது.

அறிவியல் அணுகுமுறை அவசியம்
இதுபற்றி தேசிய கடல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் எம்வி ரமண மூர்த்தி, கூறுகையில், ‛‛மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளின் தாக்கம் கடற்கரையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஆறுகளில் இருந்து வரும் வண்டல் அளவு குறைந்துள்ளது. இதுவும் கடற்கரையின் கரை அரிப்புக்கு மற்றொரு முக்கி காரணமாகும். கடல் மட்ட உயர்வு, வேகமான சூறாவளி, அதிக உயரத்துக்கு அலை எழும்புதல் ஆகியவை காலநிலை மாறுபாட்டால் ஏற்படுகிறது. இதனால் கடல் அரிப்பை தடுப்பதற்கான கட்டமைப்புகளின் வடிவமைப்பை மறுமதிப்பீடு செய்வது அவசியமாகும். இதற்கு அறிவியல் அணுகுமுறை தேவை'' என்றார்.

விரைவான செயல்பாடு அவசியம்
இதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் கூறுகையில், ‛‛காலநிலை மாற்றத்தால் கடற்கரை மட்டுமின்றி க்ரோய்ன்கள்(groynes), கடல் சுவர்கள், சிறு துறைமுகங்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவையும் மாற்றமடைந்துள்ளன. ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக, கடற்கரையோரத்தில் க்ரோயின்கள் கட்டும் பணியை நிறுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில் உத்தரவிட்டது. இது வரவேற்கத்தக்கது. மாநில அரசு உடனடியாக கரையோர மேலாண்மை திட்டத்தை வகுத்து, கடற்கரையில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முறையாக செயல்படுத்த வேண்டும்'' என்றார்.

நீர்த்திட்டங்களால் பாதிப்பு
இதுபற்றி புவி கண்காணிப்புக்கான சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு நிபுணர் ராஜ் பகத் பழனிச்சாமி கூறுகையில், ‛‛ஆற்றின் பாதைகளில் முறையின்றி தடுப்பணைகள், அணைக்கட்டுகள் மற்றும் பிற நீர் தடை கட்டமைப்புகள் கட்டப்படுகின்றன. இது கரையோரங்களுக்கு வண்டல் விநியோகத்தை தடை செய்கிறது. தமிழகத்தில் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள் உள்ளன. ஆனால் ஆறுகளுக்குமத்தியில் நீர் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் கடலுக்கு வண்டல் வரத்து இல்லை. வண்டல் வரத்து குறைவு என்பது அரிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பாதுகாப்பு திட்டம் அவசியமாகும்'' என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications