Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாருக்கு டார்கெட்? 3வது நாளாக அன்புச்செழியன் வீட்டில் குவிந்த வருமான வரித்துறை டீம்.. தொடரும் ரெய்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து.வருகிறார்கள். தமிழ்நாட்டில் முக்கிய சினிமா தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள் வீடுகளில் இன்று அடுத்தடுத்து ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் முதலில் ரெய்டு தொடங்கியது. அவருக்கு சொந்தமான 10 இடங்களில் நேற்று முதல் நாள் ரெய்டு நடந்தது.

இதில் பெரிய அளவில் ஆவணங்கள் கிடைக்காத நிலையில் நேற்றும் தொடர்ந்து ரெய்டு நடத்தப்பட்டது.

ரெய்டு

ரெய்டு

அன்புச்செழியன் வீடு, அவரின் நண்பர்கள் வீடு, அவரின் பல்வேறு அலுவலகங்களில் சென்னை மற்றும் மதுரையில் ரெய்டு நடத்தப்பட்டது. நேற்று இந்த ரெய்டில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று மூன்றாவது நாளாக ரெய்டு நடத்தப்படுகிறது. தி.நகரில் உள்ள அவரது இல்லம் மற்றும் பல்வேறு அலுவலகங்களில் சோதனை தொடர்கிறது.

2020 ரெய்டு

2020 ரெய்டு

கடந்த முறை 2020ம் ஆண்டில் அன்புசெழியன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது அவரின் வீட்டில் இருந்து 77 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதோடு கணக்கில் வராத பல கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் இவர் சினிமாவில் பல தயாரிப்பாளர்களுக்கு கடன் கொடுத்துள்ளார். வட்டிக்கு கடன் கொடுத்ததாக இவர் மீது சில புகார்களும் கூட உள்ளன.

பின்னணி

பின்னணி

அவர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையிலேயே 3வது நாள் ரெய்டு நடக்கிறது. அன்புசெழியனுக்கு அரசியல் ரீதியாக பல்வேறு பின்புலங்கள் இருக்கின்றன. சமீபத்தில் இவரின் இல்ல திருமண விழாவில் சமீபத்தில் கூட மொத்த திரையுலக பிரபலங்களும், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Recommended Video

    Anbuchezhiyan-யின் கதை | தமிழ் சினிமாவின் Finance கை *Crime
     காரணம் என்ன?

    காரணம் என்ன?

    இந்த நிலையில்தான் அவரின் வீட்டில் ரெய்டு நடப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இவருக்கு அரசியல் ரீதியாக பல்வேறு தொடர்புகள், நட்புகள் உள்ளன. இதனால் இவர் வீட்டில் நடக்கும் ரெய்டுக்கு பின்பு வேறு யாரும் குறி வைக்கப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்புசெழியன் வீட்டு ரெய்டை தொடர்ந்து கலைப்புலி எஸ் தாணு வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறை ரெய்டு இரண்டு நாட்களாக நடந்தது. Studio Green தயாரிப்பாளரும், நடிகர் சூர்யாவின் உறவினருமான எஸ். ஆர் பிரபுவின் வீட்டிலும் இரண்டு நாட்களாக ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+