Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுதந்திர தினம்: ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்து.. புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர் என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன. ஆளுநர் ரவி தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. சுதந்திர தினத்தன்று மாலை ஆளுநர் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்தளிப்பது வழக்கம்.

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் இடையே துவக்கம் முதலே சுமுகமான உறவு இல்லை. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. ஆளுநர் ரவியின் பதவிக்காலம் கடந்த 31 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆளுநர் மாற்றம் செய்யப்பட்டனர்.

independence day independence day 2024 Governor Tea Party

ஆனால், தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை. இதனால், ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், வரும் 15 ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டைகொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றுவார்.

சுதந்திர தினத்தன்று மாலை ஆளுநர் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், வரும் 15 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என் ரவி தேநீர் விருந்தளிக்க உள்ளார். இதற்காக தமிழகத்தின் முக்கிய கட்சிகளுக்கு தேநீர் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், முக்கிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் பதவிக்காலம் முடிந்த பிறகும் ஆர்.என். ரவி ஆளுநராக தொடர்வது அரசமைப்புக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ள காங்கிரஸ், தமிழக மக்களின் நலனுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக ஆளுநர் ரவி செயல்படுவதால் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க போவது இல்லை என்று அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி மட்டும் இன்றி கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை "தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே அவரது செயல்பாடுகள் இருப்பதால் இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:-

சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி. ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கட்சி அரசியல் சார்ந்ததாக அமைவதில் மக்களாட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்படுகிறது. அவ்வகையில் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே தமிழ்நாட்டின் ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.

மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிப்பதில் முட்டுக் கட்டை போடுவாதால், பட்டப்படிப்பு முடிந்தும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு நிகழ்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், ஆளுநர் பதவிக்காலம் முடிந்தும் அந்தப் பதவியில் தொடர்வது அரசமைப்புக்கு எதிரானது. அதனால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக புறக்கணிக்கின்றோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறிவித்தன. இதையடுத்து, சுதந்திர தினம் அன்று நடைபெறுவதாக இருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+