பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்!
சென்னை: மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் இந்தியாவை கடுமையாக பாதித்திருக்கிறது. இந்நிலையில் இந்தியா உட்பட மொத்த உலகமும், கடந்த 1970ல் சந்தித்த எண்ணெய் நெருக்கடியை மீண்டும் சந்திக்கப்போவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவின் பக்கத்து நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் விரைவில் விலை உயரும் என்றும், மீண்டும் விலை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்ப ரொம்ப காலம் ஆகலாம் என்றும் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

நிபுணர் கொடுத்த வார்னிங்
ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில், சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) இயக்குநர் பாத்திஹ் பைரோல் முக்கிய விஷயத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். அதாவது, மத்திய கிழக்கு போர் காரணமாக.. உலகப் பொருளாதாரம் ஒரு பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக கடுமையாக எச்சரித்துள்ளார். தற்போதைய எரிசக்தி நெருக்கடியை 1970களின் எண்ணெய் நெருக்கடிகளுக்கும், ரஷ்யாவின் 2022 உக்ரைன் படையெடுப்பின் தாக்கத்திற்கும் ஒப்பிட்டிருக்கிறார்.
1970க்கு போகும் உலகம்
"இந்த நெருக்கடி, தற்போதைய நிலையில், இரண்டு எண்ணெய் நெருக்கடிகள் மற்றும் ஒரு எரிவாயு சரிவு சேர்ந்தது. உலகப் பொருளாதாரம் இன்று மிகப் பெரிய அச்சுறுத்தலிலுள்ளது. இது கூடிய விரைவில் தீர்க்கப்பட வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் எந்த நாடும் இதன் தாக்கத்திலிருந்து தப்பாது. எனவே உலகளாவிய முயற்சிகள் தேவை.
இப்போரில், மத்திய கிழக்கு முழுவதும் 40 எரிசக்தி சொத்துகள் மிகக் கடுமையாக சேதமடைந்துள்ளன. சர்வதேச எரிசக்தி முகமை, ஆசிய மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களுடன், சேமிப்பு எண்ணெயை மேலும் விடுவிப்பது குறித்து கலந்தாலோசித்து வருகிறது" என்று கூறியிருக்கிறார்.
இந்தியாவுக்கு ஆபத்து
இந்த நெருக்கடியிலிருந்து எந்த நாடும் தப்பிக்காது என்று அவர் கூறியிருப்பது இந்தியாவுக்கும் பொருந்தும். இந்தியாவில் தற்போது 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருக்கிறது. ஏப்.29ம் தேதி இந்த தேர்தல்கள் நிறைவுப்பெறுகின்றன. எனவே அன்றைய தினம் மாலையில் எரிபொருள் விலை உயர வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை 120 டாலர் என உயர்ந்திருக்கிறது.
கச்சா எண்ணெய் வாங்க நமக்கு டாலர் தேவை. ஏற்கெனவே இருக்கும் டாலர் கையிருப்பு இதனால் வேகமாக குறையும். இது இந்திய ரூபாய் மதிப்பை மேலும் சரிய செய்யும். இப்படியாக விலை உயர்வு + ரூபாய் மதிப்பு சரிவு என இரண்டு பெரிய பிரச்சனையை இந்தியா எதிர்கொண்டிருக்கிறது.
நிலைமை எப்போது சரியாகும்?
போர் அடுத்த சில வாரங்களில் நிறுத்தப்பட்டு, ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டால் நிலைமை அடுத்த 3-6 மாதங்களில் சரியாகிவிடும். போர் நீடித்தால், நிலைமை சரியாக 1-2 ஆண்டுகள் வரை ஆகலாம்.












Click it and Unblock the Notifications