47 நாட்களுக்கு பிறகு முதல் முறை.. குணமடைந்தோரை விட அதிகரித்த கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது?
சென்னை: இந்தியாவில் 47 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக புதிதாக பதிவாகியுள்ள கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிலிருந்து குணமடைந்த எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாக காணப்பட்டதால், ஒரு கட்டத்தில் குணமடைவோர் எண்ணிக்கையை விடவும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த 47 நாட்களாக தொடர்ந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்தது.
ஆனால் வியாழக்கிழமை மத்திய அரசு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி 45 ஆயிரத்து 882 புதிய கொரோனா வைரஸ் கேஸ்கள் பதிவாகியுள்ளன. ஆனால் நோயிலிருந்து குணமடைந்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 807 என்ற அளவில் உள்ளது.

47 நாட்களுக்கு பிறகு
சிறிய அளவு வித்தியாசம்தான், என்ற போதிலும் கூட 47 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக புதிய கேஸ்கள் எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது.

ஊரடங்கு
ஒரு பக்கம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஊரடங்கு உத்தரவு பழையபடி அமலுக்கு வந்துள்ளது. மக்கள் அனைவரும் வீதியில் முண்டியடித்து கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கியுள்ளனர். மற்றொரு பக்கம் இதுபோல புள்ளிவிபரம் வந்துள்ளதால் மீண்டுமொரு லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்படுமா என்று கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் அரசு தரப்பில் அவ்வாறு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

முதல் முறை
கடந்த செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்திற்கு பிறகு தினசரி பதிவாகும் கொரோனா வைரஸ் கேஸ்கள் எண்ணிக்கை, குணமடைவோர் எண்ணிக்கையைவிட குறைய ஆரம்பித்தது. இந்த நிலையில் மீண்டும் பாதித்தவர் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளில் இரண்டாவது அலை வீசுவதால், கொரோனா வைரஸ் கேஸ்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நமது நாட்டில், டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் சமீபகாலமாக கேஸ்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த மாநிலங்களில் மூன்றாவது அலை வீசுவதாக கூறப்படுகிறது.

கொரோனா பரவல்
பண்டிகை காலம் முடிவடைந்துள்ளது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக நோய் பரவல் அதிகரிப்பு வரும் காலங்களில் அதிகம் பதிவாக கூடும் என்று கூறப்படுகிறது. நாடு முழுக்க மறுபடி கொரோனா வேகமாக பரவுமோ என்ற அச்சத்தையும் வெளிப்படுத்துகிறது சில மருத்துவ நிபுணர்களின் கருத்துகள். இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியுள்ளது. அதில் 94 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 7500 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன. கேரளாவில் 5700 புதிய கேஸ் பதிவாகியுள்ளன.
-
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன்












Click it and Unblock the Notifications