கட்டுமானம், ரியல் எஸ்டேட் துறைக்கு பெரிய அடி.. புலம்பெயர் தொழிலாளர் ஊருக்கு போனதால் உருவான சிக்கல்
சென்னை: லாக்டவுனில் பல தளர்வுகள் இருந்தாலும், புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்கள் திரும்புவதால், தொழில் நிறுவனங்களில், பணியாளர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
சமூக பாதுகாப்பு அம்சங்கள் கிடைக்காத அமைப்பு சாரா தொழிலாளர்களின் கையில் உள்ள கடைசி காசுவரை செலவு செய்துவிட்டு வறுமையில் வாடுகின்றனர்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தொழிலாளர்களை, பல்வேறு மாநில அரசுகள் பேருந்துகள் மூலம் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வருகின்றன. பலரும் நடந்தே செல்லும் அவல நிலை உள்ளது.

பற்றாக்குறை
ஊரடங்கு 4வது முறையாக நீட்டிக்கப்பட்டாலும், சில கட்டுப்பாடுகளுடன் தொழிற்சாலைகள் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த சூழ்நிலையில் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதால், கட்டுமானம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

திரும்புவது குறையும்
இது தொடர்பாக ஆய்வு நிறுவனங்கள், பல்வேறு துறைசார் நிபுணர்களிடம் ஆய்வு மேற்கொண்ட போது, பொது முடக்கம் காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் பொது முடக்கம் முடிந்தாலும், 40 சதவிகித தொழிலாளர்கள் தங்கள் பணிக்கு திரும்புவார்கள் என தெரிவித்ததாக அந்த ஆய்வு நிறுவனம் கூறி உள்ளது.

எந்த துறைகளுக்கு பாதிப்பு
இதனால் கட்டுமானத் துறைக்கு 59 சதவிகிதம் அளவிற்கும், ரியல் எஸ்டேட் துறையில் 30 சதவிகிதம் அளவிற்கும், உற்பத்தி துறையில் 29 சதவீதம் அளவிற்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர். கட்டுமான துறையில் பணிகள் வேகமாக நடந்தால்தான், பொருளாதார மந்த நிலை விரைவில் நீங்கும். ஆனால், தொழிலாளர் பற்றாக்குறை, அந்த துறையை அச்சுறுத்துகிறது.
Recommended Video

வாகனத் துறை
மேலும், வாகனத் துறையில் 29 சதவிகிதம், உட்கட்டமைப்பு துறையில் 24%, ஜவுளித்துறையில் 22 சதவிகிதமும், வேளாண்துறையில் 17 சதவீதமும் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் என நிபுணர்கள் கணிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications