கட்டுமானம், ரியல் எஸ்டேட் துறைக்கு பெரிய அடி.. புலம்பெயர் தொழிலாளர் ஊருக்கு போனதால் உருவான சிக்கல்
சென்னை: லாக்டவுனில் பல தளர்வுகள் இருந்தாலும், புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்கள் திரும்புவதால், தொழில் நிறுவனங்களில், பணியாளர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
சமூக பாதுகாப்பு அம்சங்கள் கிடைக்காத அமைப்பு சாரா தொழிலாளர்களின் கையில் உள்ள கடைசி காசுவரை செலவு செய்துவிட்டு வறுமையில் வாடுகின்றனர்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தொழிலாளர்களை, பல்வேறு மாநில அரசுகள் பேருந்துகள் மூலம் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வருகின்றன. பலரும் நடந்தே செல்லும் அவல நிலை உள்ளது.

பற்றாக்குறை
ஊரடங்கு 4வது முறையாக நீட்டிக்கப்பட்டாலும், சில கட்டுப்பாடுகளுடன் தொழிற்சாலைகள் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த சூழ்நிலையில் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதால், கட்டுமானம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

திரும்புவது குறையும்
இது தொடர்பாக ஆய்வு நிறுவனங்கள், பல்வேறு துறைசார் நிபுணர்களிடம் ஆய்வு மேற்கொண்ட போது, பொது முடக்கம் காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் பொது முடக்கம் முடிந்தாலும், 40 சதவிகித தொழிலாளர்கள் தங்கள் பணிக்கு திரும்புவார்கள் என தெரிவித்ததாக அந்த ஆய்வு நிறுவனம் கூறி உள்ளது.

எந்த துறைகளுக்கு பாதிப்பு
இதனால் கட்டுமானத் துறைக்கு 59 சதவிகிதம் அளவிற்கும், ரியல் எஸ்டேட் துறையில் 30 சதவிகிதம் அளவிற்கும், உற்பத்தி துறையில் 29 சதவீதம் அளவிற்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர். கட்டுமான துறையில் பணிகள் வேகமாக நடந்தால்தான், பொருளாதார மந்த நிலை விரைவில் நீங்கும். ஆனால், தொழிலாளர் பற்றாக்குறை, அந்த துறையை அச்சுறுத்துகிறது.
Recommended Video

வாகனத் துறை
மேலும், வாகனத் துறையில் 29 சதவிகிதம், உட்கட்டமைப்பு துறையில் 24%, ஜவுளித்துறையில் 22 சதவிகிதமும், வேளாண்துறையில் 17 சதவீதமும் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் என நிபுணர்கள் கணிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications