சூப்பர் நியூஸ்.. தென்மேற்கு பருவமழை மே 31-ல் தொடங்குகிறதாம்.. இந்திய வானிலை ஆய்வு மையம்!
டெல்லி: இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை மே 31-ம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். இந்த இரண்டு காலங்களிலும் பெரும்பாலும் நல்ல மழை பெய்யும். இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்து இருந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட ஒருநாள் முன்னதாக அதாவது மே 31-ம் தேதி முதல் தொடங்க அதிக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி நேற்று ஒடிசாவில் கரையை கடந்த யாஸ் புயல் தென் மேற்கு பருவமழை காற்றை மேலும் வலுப்படுத்த உதவியது என்றும் மாலத்தீவு-கொமொரின் பகுதி, தென்மேற்கு மற்றும் வங்காள விரிகுடாவின் கிழக்குப் பகுதி, தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வங்காளத்தின் மேற்கு மைய விரிகுடாவின் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஒடிசாவின் சந்த்பாலியில் 29 செ.மீ; கரத்பூர் மற்றும் ராஜ்கனிகா தலா 25 செ.மீ மழை பெய்துள்ளன. தமிழகத்தில் கன்னியாகுமரியில் 24 செ.மீ. கேரளாவில் இடுக்கி 19 செ.மீ. திருவனந்தபுரம் 17 செ.மீ. மழை பெய்துள்ளன என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications