Indian Railway: ரயில் டிக்கெட் புக்கிங்.. சுத்திக்கிட்டே புக் ஆகாம போகுதா? பிரச்சினைக்கு எண்டு கார்டு போடும் ரயில்வே!
சென்னை: ரயில் டிக்கெட் முன்பதிவில் உள்ள சிக்கல்கலை சீர் செய்து ஒரு நிமிடத்திற்கு 1.25 லட்சம் டிக்கெட்டுகள் புக்கிங் செய்யும் அளவுக்கு திறன் கொண்டதாக ரயில்வே டிக்கெட் புக்கிங் சிஸ்டத்தை மேம்படுத்தும் பணிகளில் ரயில்வே ஈடுபட்டுள்ளது. வரும் ஏப்ரல், மே மாதத்திற்குள் மேம்பட்ட தொழில் நுட்பம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் பயணிகள் விரைவாக டிக்கெட் புக் செய்ய முடியும்.
இந்தியாவில் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்கள். தொலைதூரம் என்றாலும் சரி.. உள்ளூர் போக்குவரத்து என்றாலும் சரி.. ரயில்கள் இருந்தால் அதில் பயணிப்பதே பயணிகளின் முதல் சாய்சாக இருக்கும்.

டிக்கெட் புக் செய்யும் வசதி
ரயில்களை பொறுத்தவரை 60 நாட்களுக்கு முன்பு வரை டிக்கெட் புக் செய்ய முடியும் வசதி உள்ளது. திடீர் பயண திட்டம் என்றால் தட்கலில் முன்பதிவு செய்து பயணிக்கலாம். தட்கல் டிக்கெட்டை பொறுத்தவரை சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு என்றால் காலை 11 மணிக்கும், ஏசி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும் முன்பதிவு தொடங்கும்.
தட்கல் அல்லாத சாதாரண முன்பதிவு என்றால், புக்கிங் தொடங்கும் நாளில் காலை 8 மணி முதல் புக் செய்ய முடியும். ஆனால், இந்த டிக்கெட் எல்லாம் யாருக்கும் கிடைக்கிறதோ தெரியவில்லை. குலுக்கலில் பரிசு விழுந்தது போலத்தான் டிக்கெட் கிடைக்கிறது என்று சொல்லும் அளவிற்கு ரயிலில் டிக்கெட் கிடைப்பது பெரும் பாடாக உள்ளது.
பயணிகள் கடும் அப்செட்
தட்கல் டிக்கெட் முன்பதிவின் போது பாதி நேரங்களில் டிக்கெட் கட்டணம் அக்கவுண்டில் இருந்து டெபிட் ஆகிவிடும். ஆனால், முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் சுத்திக்கொண்டே இருந்தால் வெயிட்டிங் லிஸ்ட் அல்லது டிக்கெட் காலியாகிவிட்டதாக திரையில் தோன்றும். இதனால், பயணிகள் கடும் அப்செட் ஆகும் நிலையே உள்ளது.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் புக்கிங் செய்வதில் உள்ள சிரமங்களை குறைக்க வேண்டும் ரயில் பயணிகள் ரயில்வேக்கு வலியுறுத்தி வந்த நிலையில், டிக்கெட் புக்கிங்கில் இருக்கும் தொழில் நுட்ப சிக்கல்களை தீர்க்கும் பணிகளை மேற்கொள்ளும் முயற்சியில் ரயில்வே ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
5 மடங்கு வேகம் அதிகரிப்பு
சுமார் ஆயிரம் கோடி செலவில் பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS) மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறதாம்.. இந்த டிக்கெட் முன்பதிவை மேலும் வேகமாகவும், நியாயமான முறையிலும், மிகவும் நம்பகத்தன்மையுடனும் செயல்படச் செய்வது என்ற நோக்கத்துடன் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த மேம்பட்ட சிஸ்டத்தின் மூலம், தற்போது ஒரு நிமிடத்திற்கு 25 ஆயிரம் டிக்கெட் முன்பதிவு செய்யும் நிலை இருப்பதை 1,25,000 டிக்கெட் முன்பதிவு செய்யும் அளவுக்கு வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது இருக்கும் வேகத்தை விட 5 மடங்கு வேகம் அதிகமாக உள்ளது. இந்த புதிய வசதி வரும் ஏப்ரல், ஜூனில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முறைகேடுகள் இனி நடக்காது
இந்த மேம்பட்ட சிஸ்டமானது, நிலைத்தன்மை உடையதாகவும் தவறான நோக்கத்துடன் பயன்படுத்துவதை தடுக்கும் வகையிலும் இருக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது, ரயில் டிக்கெட் புக்கிங்கின் போது நீண்ட காலமாக முகவர்கள் மற்றும் தானியங்கி 'பாட்கள்' பயன்படுத்தி டிக்கெட் புக்கிங்க் செய்யப்படுவதை களைவதில் இது முக்கிய பங்காற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேடர், ஸ்பேஸ் எக்ஸ், அவெஞ்சர் போன்ற செயலிகளை பயன்படுத்தி டிக்கெட் புக்கிங்கில் முறைகேடு நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இந்த செயலிகளில் பயன்படுத்தி ஏஜெண்ட்கள் முன்கூட்டியே பயணிகளின் பெயரை பதிவு செய்து புக் செய்து ஓடிபி, கேப்ஷா இன்றி நேரடியாக பாட் மூலமாக புக் செய்கிறார்கள். இதனால், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் போகும் நிலை உள்ளது.
விரைவில் வர இருக்கும் மேம்பட்ட அப்டேட்டில் இதுபோன்ற முறைகடுகள் தடுக்க முடியும் என்பதால் உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
-
Indian Railway: ரயில்வேயில் 2,801 பணியிடங்கள்.. 10, ஐடிஐ தகுதி தான்! யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்! -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!














Click it and Unblock the Notifications