உங்கள் பழைய ஏசியை தூக்கி எறியுங்கள்! இனி கம்மி பில்தான் வரும், அரசு தரும் ஆஃபர்
சென்னை: கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பழைய ஏர் கண்டிஷனர்களை வைத்திருப்பவர்களுக்கு அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதேபோல நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் உதவியுடன், பூமிக்கு 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள K2-18b என்ற கிரகத்தில் உயிரின் தடயங்கள் இருக்கலாம் என்ற நம்பிக்கையை விஞ்ஞானிகள்,வெளியிட்டுள்ளனர்.
இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் டைமெதில் சல்பைடு (C2H6S) மற்றும் டைமெதில் டைசல்பைடு (C2H6S2) போன்ற வாயுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமியில் இந்த வாயுக்கள் எளிய நுண்ணுயிரிகளால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இது உறுதியான தகவல் இல்லை என்றும், மேலும் ஆய்வுகள் தேவை என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஒருவேளை இது பிரபஞ்சத்தின் மிகப்பெரிய புதிரான ஃபெர்மி முரண்பாட்டிற்கு முதல் பதிலாகவும் இருக்கலாம். பிரபஞ்சம் இவ்வளவு பெரியதாக இருக்கும்போது, ஏன் இதுவரை வேற்றுக்கிரகவாசிகளை நாம் சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு இது விடையளிக்கலாம்.
உங்கள் ஏசிக்கு குட்பை சொல்லும் நேரம் வந்துவிட்டது!
கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பழைய ஏர் கண்டிஷனர்களை வைத்திருப்பவர்களுக்கு அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. 8 வருடங்களுக்கும் மேலான அல்லது குறைந்த ஸ்டார் மதிப்பீடு கொண்ட ஏசிகளை மாற்றுவதற்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளது. பழைய ஏசிகள் அதிக மின்சாரத்தை உறிஞ்சுவதுடன், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்பன் வாயுவையும் அதிகம் வெளியிடுகின்றன. புதிய 5-ஸ்டார் ஏசிகளைப் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத் தேவையைக் குறைக்கலாம், வீட்டு மின் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ,6,000 வரை சேமிக்கலாம், மேலும் இந்தியாவின் காலநிலை மாறுபாடு பிரச்சினையை குறைக்க உதவலாம் என்று அரசாங்கம் நம்புகிறது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு கோடியே 40 லட்சம் ஏர் கண்டிஷனர்கள் விற்பனையாகின்றன. நகரங்களில் கோடைக்கால மின்சாரத் நுகர்வில் ஏசிகளின் பங்கு கணிசமானது. இந்தத் திட்டத்தின்படி, பழைய ஏசிகளைக் கொடுத்துவிட்டு புதிய, திறன்மிக்க ஏசிகளை வாங்குவதற்கு தள்ளுபடி அல்லது சான்றிதழ் பெறலாம். பழைய ஏசிகள் முறையாக மறுசுழற்சி செய்யப்பட்டு, தீங்கு விளைவிக்கும் பொருட்கள் பாதுகாப்பாக அகற்றப்படும். கடந்த ஆண்டு ஏசி தேவை 60% அதிகரித்த நிலையில், இந்த ஆண்டு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, புதிய ஏசி வாங்க திட்டமிட்டிருந்தால், முன்கூட்டியே வாங்குவது நல்லது. உலகளவில் ஒவ்வொரு நொடியும் 10 புதிய ஏசிகள் நிறுவப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகத்தில் ஒரு புரட்சி
2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி, ஜாவேத் கரீம் என்பவர் மிருகக்காட்சிசாலையில் யானைகள் முன் 19 வினாடிகள் கொண்ட வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றியது பொழுதுபோக்கு உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இன்று, யூடியூப் ஒரு கலாச்சார சக்தியாக உருவெடுத்துள்ளது. இதுவரை 20 பில்லியனுக்கும் அதிகமான வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. தினமும் 20 மில்லியன் புதிய வீடியோக்கள் சேர்க்கப்படுகின்றன. யூடியூப் ஒரு தனி நிறுவனமாக இருந்தால், அதன் மதிப்பு $475 பில்லியன் முதல் $550 பில்லியன் வரை இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில், ஊடக வருவாயில் டிஸ்னியை யூடியூப் முந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் டிவி கன்டென்ட்டில் மிகப்பெரிய ஆதாரமாக யூடியூப் தற்போது விளங்குகிறது.












Click it and Unblock the Notifications