சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு லாக்டவுன் அமலானது-- கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு லாக்டவுன் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய லாக்டவுனில் கட்டுப்பாடுகளை மீறினால் அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.

Recommended Video

    Chennai Lockdown கொஞ்சம் வித்தியாசமானது ஏன்?..அதிரடி Plan

    இந்தியாவில் மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம். கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு நாள்தோறும் 2,000- த்தை தாண்டி வருகிறது.

    தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா மிக உக்கிரமாக தாக்கி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் 4 மாவட்டங்களில்தான் கொரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ளது.

    அமலுக்கு வந்த லாக்க்டவ்வுன்

    அமலுக்கு வந்த லாக்க்டவ்வுன்

    இதனால் இம்மாவட்டங்களில் கொரோனா பரவுவதைத் தடுக்க இன்று வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 30-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை மீண்டும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனடிப்படையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது.

    முழு அளவில் லாக்டவ்வுன்

    முழு அளவில் லாக்டவ்வுன்

    கடந்த கால லாக்டவுன்களைப் போல கட்டுப்பாடுகள் இம்முறை தளர்த்தப்படப் போவது இல்லை என அரசு அறிவித்திருக்கிறது. இந்த 4 மாவட்டங்களிலும் அனைத்துவித கட்டுப்பாடுகளும் முழு அளவில் கடைபிடிக்கப்படும் என வழிகாட்டுதல்களையும் அரசு ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    சொந்த ஊர் பயணம்

    சொந்த ஊர் பயணம்

    தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 4 மாவட்டங்களிலும் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையைவிட்டு பலரும் சொந்த ஊர்களுக்கு வியாழக்கிழமை இரவே திரும்பிவிட்டனர். இருசக்கர வாகனங்களிலும் கார்களிலும் இவர்கள் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கில் யணம் மேற்கொண்டதால் புறநகர்களில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்தது.

    பிரதான சாலைகள் மூடல்

    பிரதான சாலைகள் மூடல்

    சென்னையில் அண்ணா சாலை உட்பட அனைத்து முதன்மையான சாலைகளும் மூடப்பட்டுவிட்டன. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க 2 கி.மீ சுற்றளவுக்குள்தான் நடமாட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இருசக்கர வாகனங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜூன் 30-ந் தேதி வரை அனைத்து இறைச்சி கடைகளும் இழுத்து மூடப்பட்டுள்ளன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+