Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு பஸ்சில் சில்லறை வாங்காமல் இறங்கிட்டீங்களா.. கவலையை விடுங்க! இனி அக்கவுண்டிற்கே பணம் வந்துடுமாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் போது டிக்கெட் எடுத்து விட்டு மீதி சில்லறை பணத்தினை வாங்க மறந்து சென்றால் பணத்தை பெறுவதற்கான வசதியை அரசு போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியை பயன்படுத்தி பணம் எப்படி பெறுவது என்பது பற்றி இங்கே பார்ப்போம்.

தமிழகத்தில் பயணிகளின் போக்குவரத்து தேவையை பெரிதும் தீர்த்து வைப்பது தமிழக அரசு பேருந்துகள்தான். சென்னை போன்ற பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் இயக்கப்படும் ஆயிக்கணக்கான பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

Government Bus Tamil Nadu Transport Corporation Tamil Nadu

பஸ்களில் பயணம் என்றாலே பல பயணிகளுக்கும் பெரும் சிக்கலாக இருப்பது சில்லறை பிரச்சினைதான். அடிக்கடி பஸ்களில் சில்லறை பிரச்சினை பயணிகளுக்கு பெரும் தலைவலியாகவே மாறிவிடும். சில நேரங்களில் டிக்கெட்டை கொடுத்துவிட்டு மீதி சில்லறையை பயணிகளிடம் நடத்துனர்கள் கொடுக்காமலே பிற பயணிகளுக்கு கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அத்தகைய நேரங்களில் பயணிகள் மீதி சில்லறையை வாங்குவதற்குள் படாதபாடு பட்டுவிடுவார்க்ள். பல நேரங்களில் நடத்துனர்கள் சரியான தொகையை கொண்டு வர மாட்டீர்களா.. என பயணிகளிடம் முறைக்கும் சம்பவமும் நடைபெறும். இப்படி பேருந்தில் சில்லறை பிரச்சினை என்பது பயணிகளின் நிம்மதியை பயணம் முழுக்க கூட சில நேரம் கெடுத்து விடும். தற்போது தொலை தூர பஸ்களில் யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

நடத்துனர்களிடம் இருக்கும் கருவி மூலமாக கூகுள் பே வழியாக டிக்கெட்டுக்கான கட்டணத்தை செலுத்தி விட முடியும். தற்போதைய கால கட்டத்திற்கு ஏற்ப பயணிகளின் சிரமத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை செய்து வருகிறது. அந்த வகையில், தான் தற்போது சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.

இதன்படி அரசு பேருந்துகளில் சில்லறை வாங்க மறந்து விட்டால் யுபியை மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அரசு போக்குவரத்து கழகத்தின் இலவச தொலைபேசி அழைப்பு எண்ணான 1800 599 1500 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயண சீட்டு (டிக்கெட்) விவரங்களை தெரிவித்து சில்லறைகளை யுபிஐ மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் செல்லும் போது டிக்கெட் எடுத்தது போக மீதி சில்லறை தொகையை கடைசியில் தருகிறேன் என கண்டக்டர்கள் சொல்வதை பார்த்து இருக்கிறோம். அப்படிப்பட்ட நேரத்தில் சில பயணிகள் மீதி தொகையை வாங்க மறந்து பயணிகள் சென்று விடுவார்கள். இப்படிப்பட்ட சூழலில், அரசு போக்குவரத்து கழகத்தின் இந்த புதிய வசதி பெரிதும் பயனுள்ளதாக அமையும். அதே நேரத்தில், எவ்வளவு சில்லறை தொகை தர வேண்டும் என்பது நடத்துனருக்கும் பயணிக்கும் மட்டுமே தெரியும்.

சில நேரங்களில் நடத்துனர்கள் டிக்கெட்டில் எழுதி கொடுப்பார்கள். சில நடத்துனர்கள் எழுதி கொடுப்பதும் இல்லை. இப்படிப்பட்ட நிலையில், மீதி பணத்தை பெறுவதில் பல நடைமுறைகள் சிக்கல்கள் எழக்கூடும் என்று இது குறித்த தெளிவான விவரங்களை அரசு போக்குவரத்து கழகம் வெளியிட வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+