ஈரான் வான்வழி தாக்குதல்.. பஹ்ரைனில் கேட்ட வெடி சத்தம்! கள நிலவரம் என்ன? நேரடி ரிப்போர்ட்
துபாய்: இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் இருக்கும் நாடுகளில் போர்மேகம் சூழ்ந்துள்ளது. பஹ்ரைனிலும் வெடிச்சத்தம் கேட்கும் நிலையில், அங்கு களத்தில் என்ன நடக்கிறது என்ற விவரத்தை ஒன் இந்தியா நேரடியாக பெற்றுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே நீண்ட நாட்களாக பதற்றமான சூழல் அதிகரித்து இருந்த நிலையில் இன்று திடீரென இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டாக ஈரான் மீது குண்டு மழை பொழிந்தது. அமேனியின் அலுவலகம் மற்றும் வீட்டை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

நேரிலேயே எங்களுக்கு சத்தம் கேட்கிறது
மேலும் ஈரான் தலைநகர் தெஹ்ரான், தெற்கு தெஹ்ரான் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இதில் பள்ளி மீது விழுந்து ஏவுகணை வெடித்து சிதறியதில் 80-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலியாகினர். இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஈரானும் அமெரிக்க படைத்தளங்கள் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
ஈரானும் பஹ்ரைன், குவைத், ஜோர்டான் என அமெரிக்க படைத் தளங்கள் உள்ள இடத்தில் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5 வது கடற்படை தளம் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஈரான் நடத்திய பதில் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு, ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முதல் முறையாக நேரில் பார்ப்பதால்
இந்த நிலையில் பஹ்ரைனில் வசித்து வரும் இந்தியர்களும் கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், ஈரான் தாக்குதல் நடத்துவதால் கேட்கும் வெடிச்சத்ததினை நேரில் உணர்ந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார். டிவியில் பலரும் பார்த்து வந்தாலும், நேரிலேயே அந்த சத்தம் எங்களுக்கு கேட்கிறது. இப்போது கூட என்னால் அந்த சத்தத்தை கேட்க முடிகின்றது.
இந்த தாக்குதலில் தற்போது வரை உயிர்ச்சேதம் என்பது இல்லை. ஈரான் அமெரிக்காவின் படைத்தளங்களை குறி வைத்து மட்டுமே தாக்குதல் நடத்துகிறது. இருந்தாலும் முதல் முறையாக இப்படி போரை பார்பதனால் இங்கு இருக்கும் இந்தியர்கள் மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது. அந்த பகுதியில் இருப்பவர்கள் எல்லாம் வேறு இடத்திற்கு மாறி வருகின்றனர்.
போர் முடிந்தால் போதும்
தமிழ் மக்களுக்கு இந்திய தூதரகமும் என்னென்ன தகவல்கள் வருகிறதோ அதை எல்லாம் வந்துகொண்டு இருக்கிறது. அவசர கால எண்கள் கொடுத்து இருக்கிறார்கள். எல்லா உதவியும் செய்ய தயாராக இருக்கிறார்கள். இந்த போர் அப்படியே முடிந்துவிட்டால் நல்லா இருக்கும்.." என்று கூறினார். இது தொடர்பான முழு பேட்டியை இங்கு காணலாம்.
-
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 20,000 கி.மீ தூரத்திலிருந்து உதவும் இந்திய நட்பு நாடு! -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications