ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி
மும்பை: மத்திய கிழக்கில் வெடித்துள்ள பிராந்திய போர் இந்தியப் பங்குச்சந்தைகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரின் தாக்கத்தினால் இந்திய முதலீட்டாளர்கள் சுமார் ரூ.31 லட்சம் கோடியை இழந்துள்ளனர். கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு இந்தியப் பங்குச்சந்தைகள் மிக மோசமான சரிவை எதிர்கொண்டுள்ளது.
மத்திய கிழக்கில் பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல் தொடங்கியது. அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தின. இதற்கு ஈரானும் பதிலடி தாக்குதலை நடத்தியது. இதனால் சர்வதேச அளவில் ஒருவித பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பு சர்வதேச அளவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.

இந்தியப் பங்குச்சந்தை
இந்த மோதல் இப்போது இந்தியப் பங்குச்சந்தையைப் பாதித்துள்ளது. இந்த போர் காரணமாக இந்திய முதலீட்டாளர்களின் சுமார் ₹31 லட்சம் கோடியை இழந்துள்ளனர். கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவது, உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் ஆகியவை இந்தியப் பங்குச்சந்தையைச் சரிவில் தள்ளியது. உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா இருப்பதால் இது பெரிய சவாலாக உள்ளது.
இன்று திங்கட்கிழமை ஒரே நாளில் ₹12.78 லட்சம் கோடி மார்கெட் வெல்யூவை இந்தியப் பங்குச்சந்தைகள் இழந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1352 புள்ளிகள் குறைந்து, 77,566 புள்ளிகளாக உள்ளன. அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 50, 422 புள்ளிகள் குறைந்து, 24,028ஆக உள்ளது. கடந்த ஓராண்டில் இந்திய பங்குச்சந்தைகள் இந்தளவுக்குச் சரிந்ததே இல்லை. அப்படியொரு மிக மோசமான சரிவை இந்தியப் பங்குச்சந்தைகள் சந்தித்துள்ளது.
ரூ.31 லட்சம் கோடி
புவிசார் அரசியல் பதற்றத்தால் இந்த நிறுவனங்களின் சந்தை மூலதனம் வீழ்ச்சியடைந்தது. மும்பை பங்குச்சந்தை டேட்டாவின்படி, பிப்ரவரி 28ம் தேதி ₹463 லட்சம் கோடியாக இருந்த மார்கெட் வெல்யூ, மார்ச் 6ம் தேதி ₹444 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது ₹19 லட்சம் கோடி குறைந்தது. மார்ச் 9 அன்று வர்த்தகத்தின் போது, ₹432 லட்சம் கோடியாக, அதாவது மேலும் ₹12 லட்சம் கோடி சரிந்து. அதாவது போர் ஆரம்பித்த பிப்ரவரி 28ம் தேதி முதல் இப்போது வரை மட்டும் ₹31 லட்சம் கோடி இழப்பை இந்திய முதலீட்டாளர்கள் எதிர்கொண்டுள்ளனர்..
காரணம்
மத்திய கிழக்கு மோதல் கச்சா எண்ணெய் விலையை உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே வாரத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் 25%க்கும் அதிகமாக உயர்ந்து, ஒரு பீப்பாய் $114ஐக் கடந்தது. இந்தியா தனது எண்ணெய் தேவைகளில் சுமார் 85% இறக்குமதி செய்வதால், கச்சா எண்ணெய் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பணவீக்கம், வர்த்தக பற்றாக்குறை மற்றும் நிதி அழுத்தங்கள் குறித்த கவலைகளை எழுப்புவதாக உள்ளது. மேலும், இது பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது.
கடும் சரிவு
போர் பதற்றத்தால் கடந்த 4 நாட்களாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை விற்றனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் சுமார் ₹21,000 கோடியை விற்றுள்ளனர். இந்த விற்பனை அனைத்து துறைகளிலும் பரவலாக இருந்தது. இதனால் எல்லா நிறுவனங்களும் கணிசமாகச் சரிந்துள்ளன. குறிப்பாக எச்டிஎஃப்சி வங்கி 3%க்கு மேலாகவும், ஐசிஐசிஐ வங்கி சுமார் 4.5% ஆகவும் சரிந்தன. பாரத ஸ்டேட் வங்கி 5%க்கு மேலாகவும், லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் கிட்டத்தட்ட 5% ஆகவும் சரிவு கண்டன. இந்த மோதல் தொடரும்பட்சத்தில் அது மிக மோசமான பாதிப்பையே இந்தியச் சந்தைகளில் ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications