ஈரான் விவகாரத்தில் மத்தியஸ்தம்.. பாகிஸ்தானை நம்ப முடியாது! ஓபனாக சொன்ன இஸ்ரேல்
ஜெருசலேம்: ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லமபாத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சும் நடைபெற உள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தானை நம்பகமான நாடாக இந்த விஷயத்தில் பார்க்கவில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி தாக்குதல் தொடுத்தன. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்கியது. இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதலை முன்னெடுத்தது.

மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான்
ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலை நோக்கி ஏவுகணையை வீசிய நிலையில், இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்திற்கும் மேலாக ஈரான் - அமெரிக்க போர் நீடித்த நிலையில், தற்போது தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் கோபம் அடைந்த ஈரான் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது. வரும் 11 ஆம் தேதி பாகிஸ்தானில் ஈரான் - அமெரிக்கா இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
பாகிஸ்தானை நம்ப முடியாது
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறார். இதற்கிடையே, பாகிஸ்தானை நம்பகமான நாடாக இந்த விஷயத்தில் பார்க்க முடியாது என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவென் அசார் இது தொடர்பாக கூறுகையில், ஈரான் - அமெரிக்கா போர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ததாக கூறும் பாகிஸ்தானை நம்பகான நாடாக இஸ்ரேல் பார்ப்பது இல்லை.
பாகிஸ்தானின் சேவையை பெறுவதில் அமெரிக்காவுக்கு தனிப்பட்ட நலன்கள் இருக்கலாம். தெற்கு லெபனானில் "ஹிஸ்பொல்லா தீவிரவாத கட்டமைப்பு" இல்லாத நிலையை உருவாக்குவதே இஸ்ரேலின் நோக்கம். ஹிஸ்புல்லாவின் தாக்குதலில் இருந்து வடக்கு எல்லையை காப்பாற்றுவது இஸ்ரேலின் உரிமை. கடந்த சில மணி நேரங்களில் மிகப்பெரும் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது. 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை நாங்கள் கொன்று இருக்கிறோம்
லிட்டானி நதியின் தெற்கில் ஹிஸ்பொல்லா இருப்பதை எங்களால் ஏற்க முடியாது. லெபனான் அரசு வெறும் பேச்சில் மட்டுமின்றி, ஹிஸ்பொல்லாவின் திறன்களை அகற்றும் வகையில் முக்கியமான பங்காற்ற வேண்டும். அதனால் வடக்கு பகுதியில் உள்ள எங்கள் சமூகங்கள் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகாது என்பதை உறுதிப்படுத்த முடியும்," என்றார்.
-
முதல்ல பேச கத்துக்கோங்க டிரம்ப்.. ஈரான் கொடுத்த வார்னிங்.. சவுதி, துபாய், கத்தார் இருளில் மூழ்கும்! -
"நோ என்ட்ரி".. ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான்.. இஸ்ரேலால் மீண்டும் பதற்றம்.. என்ன நடந்தது? -
மத்திய கிழக்கு முழுவதும் ஒலித்த சைரன் சத்தம்.. பங்கரில் பதுங்கிய மக்கள்! மோசமடையும் நிலைமை! -
டிரம்ப்பை மதிக்காத இஸ்ரேல்? போரை நிறுத்துவதாக அமெரிக்கா சொல்லிய பிறகும் ஏவுகணை தாக்குதல்! பரபரப்பு -
ஈரான் போரால் தலைகீழாக புரட்டிப்போடப்பட்ட துறை.. இந்தியாவுக்கு மட்டும் தான் இப்படி நடக்குதா? -
எங்களை தொட்டால்.. டிரம்புக்கு எதிராக ஈரான் கையில் 2 பெரிய பிளான்.. சவுதி - கத்தாரும் தப்பாது -
ஈரான் மீது அணு ஆயுத தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா? வெள்ளை மாளிகை சொன்ன மேட்டர்! -
தங்கம், வெள்ளி விலையில் தடாலடி உயர்வு.. அப்போ சென்னை மார்கெட்டில் 'தீபாவளி பரிசு' உண்டு! -
ஈரானில் விழுந்த அமெரிக்க விமானி! இதய துடிப்பை வைத்து பிடித்த US.. CIAன் 'கோஸ்ட் மெர்மெர்' வேட்டை -
ஈரானுக்கு அமெரிக்கா இறுதி வார்னிங்.. 1973, 1979, 2022-ஐ விட உலகில் மோசமான நிலை வரலாம் -
"மொத்த மக்களும் கொல்லப்படுவார்கள்".. இன்று இரவு ஈரான் என்ற நாடே இருக்காது.. டிரம்ப் பகீர் மிரட்டல் -
ஸ்மார்ட்போன் சந்தையில் ருத்ர தாண்டவம்.. ஈரான் போர் + AI சிப்.. 40% விலை உயர்வால் ஆடிப்போன மக்கள்..!












Click it and Unblock the Notifications