சென்னையில் ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா? அதிகாரப்பூர்வ விளக்கம்
சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதற்கு மெட்ரோ பணிகள் காரணம் என்று தகவல் வெளியானது. இதற்கிடையே இது தொடர்பாகச் சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் பல்வேறு தனியார் கேளிக்கை பூங்காக்கள் இயங்கி வருகிறது. இதற்கிடையே அங்கே செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள பிரபல பப் ஒன்றில் எதிர்பாராத விதமாகக் கட்டிட விபத்து ஏற்பட்டுள்ளது.

இடிந்து விழுந்து விபத்து: இந்த விபத்து மாலை 6.45- 7 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் துரிதமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜேசிபி வாகனம் மூலம் இடிபாடுகள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த விபத்து குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மூன்று பேர் பலி: அதாவது இந்த விபத்தில் மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.. மற்ற இருவர் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த மூன்று பேரும் அங்கே பணியாற்றி வந்த ஊழியர்கள் ஆவர். உயிரிழந்தோர் தமிழகத்தைச் சேர்ந்த 45 வயதான சைக்ளோன்ராஜ், மணிப்பூரைச் சேர்ந்த இவுரவ் மேக்ஸ் (24). லாலி (22) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மாலை நேரத்தில் முதல் தளத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது,, இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சுமார் 40 பேரைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து நடந்த போது உள்ளே 20 முதல் 22 அதிகாரிகளும் ஓரிரு கஸ்டமர்களும் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர். மீட்புப் பணிகளும் தொடர்ந்து நடக்கும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும், மேற்கூரையின் ஒரு பகுதி மட்டுமே இடிந்து விழுந்ததால் மட்டுமே பாதிப்பு இந்தளவுக்கு இருந்துள்ளது. மேற்கூரை முழுமையாக இடிந்து விழுந்து இருந்தால் சேதம் மிக மோசமாக இருந்து இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ள அபிராமிபுரம் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
மெட்ரோ பணிகள் காரணமா: இந்த பப் உள்ள இடத்திற்கு மிக அருகே தான் சுரங்க மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. விடுதி அருகே மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் நடக்கும் நிலையில், அந்த கோணத்தில் விசாரணை நடந்தது. இருப்பினும் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணிகளால் விபத்து நடந்ததா என்பதை வல்லுநர்கள் தான் சொல்ல வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே விபத்து நடந்த பப்பிற்கு மெட்ரோ அதிகாரிகளும் விரைந்துள்ளனர். மெட்ரோ பணிகளால் இந்த விபத்து நடந்ததா என்ற கோணத்தில் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே சென்னை மெட்ரோ நிர்வாகம் இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளது. இது குறித்து அவர்கள் எக்ஸ் பக்கத்தில், "ஆழ்வார்பேட்டை செக்மெட் பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்பட்டது இல்லை என்பதை CMRL தெளிவுபடுத்த விரும்புகிறது,.
ஏனெனில் விபத்து நடந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் தான் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. கட்டிடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சிஎம்ஆர்எல் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில், அவர்களுக்குச் சென்னை மெட்ரோ அதிகாரிகள் உதவுவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications