மஞ்ச தாலியை கழற்றினாலே டைவர்ஸ்? அப்பீலுக்கு போன மதம் மாறிய மனைவி.. மதுரை ஹைகோர்ட் சொன்னது என்ன
சென்னை: திருமண உறவில் தாலியை அகற்றுவது என்பது கணவருக்குக் கடுமையான மனரீதியான கொடுமையைக் கொடுப்பதற்குச் சமம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரிந்து வாழும் தம்பதியரின் விவாகரத்தை உறுதி செய்து, மனைவியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அனைவரது கவனத்தையும் பெற்றுள்ள இந்த வழக்கின் பின்னணி என்ன என்பது இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
ராணுவத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய ஒருவருக்கும், ஒரு பெண்ணிற்கும் இந்து மதச் சடங்குகளின்படி முறைப்படி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

திருமணமான சில வருடங்களிலேயே, தன் கணவருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாக மனைவி சந்தேகப்பட்டார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.
கணவரை சந்தேகப்பட்ட மனைவி
இந்த சந்தேகத்தின் உச்சக்கட்டமாக, ராணுவத்தில் பணியாற்றி வந்த தன் கணவரின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கில், அவரது உயரதிகாரிகளுக்கு மனைவி புகார்களை அனுப்பினார். அதில் கணவரின் நடத்தை குறித்துப் பல அவதூறான கருத்துக்களைக் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே மனைவி,.இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, அந்த மதத்தின் நடைமுறைகளைப் பின்பற்றத் தொடங்கினார். ஒருகட்டத்தில் கணவரைப் பிரிந்து வாழவும் தொடங்கினார்.
தொடர்ந்து ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, கணவர் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். தன் மனைவி தன்னைத் தொடர்ந்து மன ரீதியாகத் துன்புறுத்தி வருவதாகவும், தங்களுக்குள் ஏற்பட்ட விரிசல் காரணமாக இனி இருவரும் சேர்ந்து வாழ எந்த ஒரு வாய்ப்பும் இல்லை என்பதால், இந்து திருமண சட்டப் பிரிவின் கீழ் தமக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மதம் மாறிய மனைவி
இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது கணவரின் வாதத்தை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
ஆனால், கீழமை நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து தீர்ப்பை எதிர்த்து, மனைவி உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி. வடமலை முன்னிலையில் விசாரணைக்கு நேற்று வந்தது.
அப்போது கணவர் தரப்பில், தன் மனைவி இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதன் காரணமாக, திருமணத்தின் சாட்சியாக விளங்கும் தாலியை அகற்றிவிட்டார், அவர் எந்த ஒரு தங்க நகைகளையும் அணிவதில்லை,கணவருக்குப் பிற பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்தது என்ற மனைவியின் குற்றச்சாட்டை, போதிய சான்றுகளுடன் நிரூபிக்க மனைவி தரப்பால் இயலவில்லை என்றெல்லாம் வாதிடப்பட்டது.
மதுரை ஹைகோர்ட் நீதிபதி
இந்த வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி பி. வடமலை தன்னுடைய தீர்ப்பில் சொன்னதாவது: "கணவன் அல்லது மனைவி தங்களின் துணையைப் பற்றி அவரது உயரதிகாரிகளிடம் ஆதாரமற்ற அவதூறு புகார்களைத் தெரிவிக்கும் பட்சத்தில், அதுவே சட்டரீதியாக விவாகரத்து கோருவதற்குப் போதுமான மற்றும் வலுவான காரணமாக அமைகிறது.
மனைவி மதம் மாறியதை சாதாரண விஷயமாகப் புறந்தள்ளிவிட இயலாது. மனைவி தாலியை அகற்றிவிட்டு தங்க நகைகள் எதையும் அணிவதில்லை என்பது சாட்சியங்களின்படி நிரூபணமாகி உள்ளது. அத்துடன் மனைவி தன் மகளுக்குக் கிறிஸ்தவப் பெயரைச் சூட்டியுள்ளார், மகள் ஒரு கிறிஸ்தவரைத் திருமணம் செய்துகொண்டார் என்பதும் சான்று ஆவணங்கள் மூலம் தெளிவாகிறது.
விவாகரத்து கேஸில் அதிரடி
இந்து பண்பாட்டின்படி, தாலியை அகற்றுவது என்பது ஒரு வகையான மனரீதியான கொடுமையின் வெளிப்பாடாகவே அமைகிறது. மனுதாரரான கணவரும், அவரது மனைவியும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனித்தனியே பிரிந்து வாழ்கிறார்கள். எனவே, இருவரையும் சேர்த்து வைக்க சாத்தியமில்லை.. கீழமை நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து உத்தரவில் தலையிட வேண்டிய அவசியமும் எழவில்லை" என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
அத்துடன் மனைவியின் மேல்முறையீட்டு மனு முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டு, விவாகரத்தையும் உறுதி செய்தார் நீதிபதி வடமலை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications