Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா? ஏன் யாருக்கும் பணமே தர கூடாதுனு எண்ணமா? ஹைகோர்ட் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாநிலத்தில் என்னதான் நடக்கிறது? என கேட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை ஜூன் 27ஆம் தேதி ஒத்தி வைத்தார்.

தமிழகம் முழுவதும் 35,039 ரேஷன் கடைகள் உள்ளன. பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, மானிய விலையில் சர்க்கரை, கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.

court legal chennai

சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சமையல் எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பொருளை வாங்கும் பல கோடி தமிழக மக்கள் பயனடைந்து வருகிறார்கள். தற்போது ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய், சிறு தானியங்கள், ராகி உள்ளிட்டவை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் கலந்து கொண்டு ஒப்பந்தம் பெற்ற கேடிவி ஹெல்த் ஃபுட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் எண்ணெய் சப்ளை செய்தது. அந்த வகையில் தமிழக அரசு தங்கள் நிறுவனத்திற்கு 141.22 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளதாகவும், டெண்டர் நிபந்தனைப்படி 30 நாட்களில் இந்த தொகை வழங்கப்பட வேண்டும் என்பதால் நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த நிறுவனம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிறுவனத்தின் தரப்பில், "நிலுவைத் தொகை இருந்த போது கூட நாங்கள் தொடர்ந்து சமையல் எண்ணெய் சப்ளை செய்து வருகிறோம். தற்போது வரை அரசு எங்களுக்கு ரூ 200 கோடிக்கும் மேல் நிலுவை வைத்துள்ளது.

இந்த தொகையை வழங்காமல் அடுத்தடுத்து டெண்டர் கேட்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த 2 வாரங்களாக ஓய்வுகால பலன்கள் வழங்கப்படவில்லை, அரசு வழங்க வேண்டிய தொகைகள் வழங்கப்படவில்லை என வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் என்ன நடக்கிறது? மாநில அரசு ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டும். இது போன்ற வழங்க வேண்டிய தொகைகளை வழங்காமல் வைத்திருப்பது எதைக் காட்டுகிறது? நிலுவை தொகைகளை வழங்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அரசு உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

மாநிலத்தில் ஏதேனும் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா என்றும் அவர் கேட்டார். மனுதாரர் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய தொகையை தருவது குறித்து அரசிடம் கருத்தை அறிந்து தெரிவிக்கும் படி அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வரும் ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+