தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா? ஏன் யாருக்கும் பணமே தர கூடாதுனு எண்ணமா? ஹைகோர்ட் கேள்வி
சென்னை: தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாநிலத்தில் என்னதான் நடக்கிறது? என கேட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை ஜூன் 27ஆம் தேதி ஒத்தி வைத்தார்.
தமிழகம் முழுவதும் 35,039 ரேஷன் கடைகள் உள்ளன. பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, மானிய விலையில் சர்க்கரை, கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.

சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சமையல் எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பொருளை வாங்கும் பல கோடி தமிழக மக்கள் பயனடைந்து வருகிறார்கள். தற்போது ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய், சிறு தானியங்கள், ராகி உள்ளிட்டவை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் கலந்து கொண்டு ஒப்பந்தம் பெற்ற கேடிவி ஹெல்த் ஃபுட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் எண்ணெய் சப்ளை செய்தது. அந்த வகையில் தமிழக அரசு தங்கள் நிறுவனத்திற்கு 141.22 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளதாகவும், டெண்டர் நிபந்தனைப்படி 30 நாட்களில் இந்த தொகை வழங்கப்பட வேண்டும் என்பதால் நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த நிறுவனம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிறுவனத்தின் தரப்பில், "நிலுவைத் தொகை இருந்த போது கூட நாங்கள் தொடர்ந்து சமையல் எண்ணெய் சப்ளை செய்து வருகிறோம். தற்போது வரை அரசு எங்களுக்கு ரூ 200 கோடிக்கும் மேல் நிலுவை வைத்துள்ளது.
இந்த தொகையை வழங்காமல் அடுத்தடுத்து டெண்டர் கேட்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த 2 வாரங்களாக ஓய்வுகால பலன்கள் வழங்கப்படவில்லை, அரசு வழங்க வேண்டிய தொகைகள் வழங்கப்படவில்லை என வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் என்ன நடக்கிறது? மாநில அரசு ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டும். இது போன்ற வழங்க வேண்டிய தொகைகளை வழங்காமல் வைத்திருப்பது எதைக் காட்டுகிறது? நிலுவை தொகைகளை வழங்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அரசு உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
மாநிலத்தில் ஏதேனும் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா என்றும் அவர் கேட்டார். மனுதாரர் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய தொகையை தருவது குறித்து அரசிடம் கருத்தை அறிந்து தெரிவிக்கும் படி அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வரும் ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் தெரிவித்தார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications