சென்னை மின்வாரிய அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்த ஐடி ஆபிசர்ஸ்..திடீர் சோதனையால் பரபரப்பு! EB விளக்கம்
சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பசுமை எரிசக்தி பிரிவு செயல் பட்டு வரும் நிலையில் அங்கு சோதனை நடந்ததாக தகவல் வெளியான நிலையில், இதுதொடர்பாக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு துறை நிறுவனமான தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் சென்னை அண்ணா சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு, மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானம், பசுமை எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். பசுமை எரிசக்தி பிரிவு செயல் பட்டு வரும் நிலையில் அங்கு ஐந்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்மொழிக் கொள்கை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மத்திய அரசு இடையே மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென தமிழகத்தின் மிக முக்கியமான துறை ஒன்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இது தொடர்பாக விசாரித்த போது ஏற்கனவே உள்ள பழைய வழக்குகள் தொடர்பாக சோதனை நடைபெற்றதாகவும், அந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்களை கேட்பதற்காகவே இந்த சோதனை என கூறப்பட்டது. மேலும் மின்வாரிய அதிகாரிகள் சிலரிடமும் இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை ஐடி அதிகாரிகள் தரப்பில் நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்த ஐடி சோதனை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில்," இன்று தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித் துறை இணை ஆணையர் தலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான செலவினங்களில் உரிய வருமான வரி பிடித்தம் (TDS) தொடர்பான வழக்கமான சரிபார்ப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை ஆகும். எனவே தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் எவ்வித வருமான வரி சோதனையும் நடைபெறவில்லை. வருமான வரி சோதனை என்ற செய்தி தவறானது" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications