குரு நானக் இந்துக்களுக்கு குரு! முஸ்லீம்களுக்கு ஆன்மிக வழிகாட்டி! காதர் மொகிதீன் புகழாரம்!
சென்னை: இந்துக்களுக்கு குருவாகவும், முஸ்லீம்களுக்கு ஆன்மிக வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் குரு நானக் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் கூறியிருக்கிறார்.
குரு நானக் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை சுட்டிக்காட்டியுள்ள அவர், குரு நானக் பற்றியும் புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கலைஞர் வேடம்
ஒரு காலத்தில் மாணவர்கள், காந்திஜியின் வேடமிட்டு கொண்டாடுவர், சில காலங்களில் பாரதியார் வேடமிட்டு கொண்டாடியதை பார்த்திருக்கிறோம். முதன் முறையாக மாணவர், மாணவியர் கலைஞர் வேடமணிந்து அவரின் பிறந்தநாளை கொண்டாடியதை பார்த்தோம் . மக்களின் மனங்களில் வாழ்ந்து வந்த கலைஞர், இப்போது குழந்தைகளின் இதயங்களிலும் இடம் பிடித்துவிட்டார் என்பது இதன் மூலம் தெரிந்தது.

குருநானக் கல்லூரி
ஜூன் 3ல் சென்னை குருநானக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நடைபெற்ற மாணவர் பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் பங்கேற்று பரிசுகளை வழங்கி ஆற்றிய உரை பொன் தகடுகளில் பொறிக்கப்பட வேண்டியவை என்பதை இங்கே பதிவு செய்தேயாகவேண்டும்.

பாபா நானக்
குருநானக் பற்றிப் பொதுவாக கூறப்படும் கருத்து இது. ''பாபா நானக் இந்துக்கா குரு முஸல் மான் கா பீர்'' - பாபா நானக், இந்துக்களுக்கு குருவாக இருக்கிறார், முஸ்லிம்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்கிறார் என்பது இதன் அர்த்தம். இத்தகைய பெருமைக்குரியவர் பெயரில் உள்ள கல்லூரியில் பேசியது தமிழக முதலமைச்சர் தெரிவித்தது, இந்திய மக்கள் அனைவருக்கும் பொருத்தமானது மட்டுமின்றி தமிழகத்தின் தனித்தன்மையை நிலைநிறுத்துவம் ஆகிறது.

வெற்றி பயணம்
பாதை விளங்கிவிட்டது, இனி பயணத்தை தொடர வேண்டியதுதான். இந்த பயணம் தமிழகத்திற்கு மட்டும் வெற்றி தரும் பயணமல்ல, இந்திய திருநாட்டிற்கே உலகம் போற்றும் வெற்றியை தரும் பயணமாகும்! பாதை தெரிகிறது; பயணம் தொடர்வோம்.












Click it and Unblock the Notifications