Jacto Geo: ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ் பெறப்பட்டது ஏன்? ஊழியர்கள் விளக்கம்!
ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ் பெறப்பட்டது ஏன் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ் பெறப்பட்டது ஏன் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த 9 நாட்களாக நடந்து வந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. நாளையில் இருந்து பணிக்கு திரும்புவதாக அரசு ஊழியர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
சற்றுமுன் சென்னையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

என்ன விளக்கம்
அவர்கள் தங்கள் விளக்கத்தில், நாங்கள் மொத்தம் 9 கோரிக்கையை வைத்தோம். இது தொடர்பாக முதல்வரை அழைத்து பேச வேண்டினோம். ஆனால் அவர் எங்களை அழைக்கவில்லை. அதைத்தான் நாங்கள் கேட்டோம். ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. நீதி அரசர்கள் கேட்டும் கூட அது நடக்கவில்லை.

கடுமையான நடவடிக்கை
வரும் பிப்ரவரி முதல் வாரம் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு தேர்வுகள் வருகிறது. இதனால் நீதிமன்ற கோரிக்கை, மக்களின் கோரிக்கை, மாணவர்களின் நலன் , அரசின் கோரிக்கை, பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கை ஆகியவற்றை நாங்கள் மதிக்கிறோம். இதனால் போராட்டத்தை கைவிடுகிறோம்.

இன்னும் இருக்கிறது
எங்கள் கோரிக்கை இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. எங்களில் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிலர் ஜெயிலில் இருக்கிறார்கள். இதை அரசு திரும்ப பெற வேண்டும். அரசு உடனடியாக இதை செய்ய வேண்டும்.

உடனே பேச வேண்டும்
முதல்வர் எங்களை அழைத்து பேச வேண்டும். பிரச்சனைகளை தமிழக முதல்வர் பேசி தீர்க்க வேண்டும். ஆனால் இதில் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. எங்கள் போராட்டம் எப்போதும் போல் உயிர்ப்போடு இருக்கும். தீர்விற்கு ஒரே வழி பேச்சுவார்த்தை மட்டும்தான்.

மீண்டும் வேலை
நாளை நாங்கள் வேலைக்கு திரும்புவோம். 2003ல் இருந்து நாங்கள் களத்தில் இருக்கிறோம். பல பிரச்சனைகளை நாங்கள் தீர்த்து இருக்கிறோம். இதையும் சரி செய்வோம். எங்களுக்கு இத்தனை நாள் ஆதரவு அளித்த அனைவர்களுக்கும், மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், என்று கூறியுள்ளனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications