சிபிசிஐடி டிஜிபியாக ஜாபர் சேட் நியமனம்.. 7 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!
தமிழ்நாடு காவல்துறை அகாடமியில் பணியாற்றிய ஜாபர் சேட் சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழ்நாடு காவல்துறை அகாடமியில் பணியாற்றிய போலீஸ் அதிகாரி ஜாபர் சேட் தற்போது சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இந்த நிலையில் போலீஸ் அதிகாரி ஜாபர் சேட் தற்போது சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காவல்துறை அகாடமியில் பணியாற்றி வந்தார். பல்வேறு வழக்குகள், விசாரணைகள் தொடர்பாக ஒரு காலத்தில் லைம் லைட்டில் இருந்த போலீஸ் அதிகாரி இவர்.
பல்வேறு புகார்கள் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட இவர், இடையில் சில நாட்கள் பணியில் இல்லாமல் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது இடம்மாற்றம் செயயப்பட்டுள்ளார்.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அருணாச்சலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்பியாக வருண்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறை நிர்வாக டிஐஜி கே. எலியர்சனும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் எஸ்பியாக சோனல் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தமிழ்நாடு காவல்துறை அகாடமி ஏடிஜிபியாக அமரேஜ் பூஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications