திமுகவுக்கு வருகிறது செக்.. 2 காவல் அதிகாரிகளை வைத்து.. அதிமுக தீட்டும் அதிரடி திட்டம்!
ஜாபர் சேட் சென்னை மாநகர கமிஷனராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: காக்கி சட்டை புள்ளிகளை வைத்து ஒரே கல்லில் எடப்பாடியார் 2 மாங்காய் அடிக்க போகிறார் என்பதுதான் பரபரப்பான பேச்சாக உள்ளது.
தமிழக போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதனின் அதிரடிகளை மக்கள் கண்கூட பார்த்து வருகிறோம். ஒருகட்டத்தில் சென்னை என்றாலே கொலை நகரம் என்ற பெயர் இருந்தது. எங்கு திரும்பினாலும் வழிப்பறி, கொள்ளை போன்றவை அசால்ட்டாக நடந்து வந்தது.
இதற்கெல்லாம் ஆங்காங்கே சிசிடிவி காமிராவை வைத்தால்தான் சரிப்படும் என்று முடிவெடுத்து, அதன்படியே செயல்படுத்தியவர் விஸ்வநாதன்.

செயல்பாடுகள்
நாட்டிலேயே, அதிக சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ள ஒரே நகரம் சென்னைதான். பெருமளவு குற்றச் செயல்கள் அனைத்தும் இந்த சிசிடிவி காமிராக்கள் மூலம் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதை மக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அதனால்தான் விஸ்வநாதனின் செயல்பாடுகளை பாராட்டி ஆளுமை விருது நேற்று முதல்வர் வழங்கி பாராட்டினார்.

அதிமுக அரசு
இது ஒரு பக்கம் இருந்தாலும், விஸ்வநாதனை இன்னும் பெட்டராக பயன்படுத்தி கொள்ளலாமா என்று முதல்வர் தரப்பு யூகிக்கிறதாம். பணி ரீதியாக விஸ்வநாதனை எந்த குறையும் சொல்ல முடியாவிட்டாலும், அவரது சேவையை மேலும் விரிவாக்க அதிமுக அரசு கருதுகிறதாம்.

ஜாபர் சேட்
அதனால்தான் விஸ்வநாதனை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கலாமா... ஒருவேளை விஸ்வநாதனுக்கு இந்த பொறுப்பு கொடுத்துவிட்டால், சிபிசிஐடி டிஜிபியாக இருக்கும் ஜாபர் சேட்டை சென்னை மாநகர கமிஷனராக நியமித்துவிடலாமா என்ற பரபரப்பு ஆலோசனை நடப்பதாக சொல்கிறார்கள். ஏனென்றால், இப்போதைக்கு திமுகவுக்கு ஒரு அழுத்தம் தருவது என்பது அதிமுகவின் கட்டாயமாக உள்ளது. பலம் பொருந்தி வரும் திமுகவுக்கு செக் வைக்க நம்பகத்தன்மை வாய்ந்த நபர் தேவை என்பதால்தான் ஜாபர் சேட் பெயர் அடிபடுகிறது.

நெருக்கமானவர்
திமுக ஆட்சிக் காலத்தில் முடிசூடா மன்னனாக இருந்தவர்தான் ஜாபர்சேட். அவர் என்ன நினைப்பாரோ அதை சாதித்துவிடுவார். சுருக்கமாக சொல்ல போனால், ஸ்டாலின், அழகிரி, கனிமொழியையும் தாண்டி கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்லப்பட்டவர். இதுவரை தமிழக காவல்துறை வரலாற்றிலேயே அதிகாரம் மிக்கவர் யாருமே இருந்தது கிடையாது என்ற பெயரையும் பெற்றவர்.

அதிரடி திட்டம்
இப்போது திமுகவுக்கு எதிராக இவர் இருக்கிறார். "திமுக ஆட்சி காலத்தில் என்னென்ன நடந்ததோ எல்லா விஷயமும் என் பாக்கெட்டுக்குள்" என்ற ஒரு விஷயத்தை முன்வைத்து டிஜிபியாகவும் பாஜக மூலமாக கணக்கு போட்டவர் இவர் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. அதனால் திமுகவுக்கு செக் வைக்க இவர்தான் சரியான ஆள் என்பதுதான் அதிமுகவின் கணக்காக உள்ளதாம். ஆக மொத்தம் விஸ்வநாதன் ஒரு பக்கம், ஜாபர் சேட் இன்னொரு பக்கம் என அதிரடி காட்ட அதிமுக திட்டமிட்டு வருகிறதாம்.
-
சசிகலாவுக்கு விழுந்த பலத்த அடி.. அஇபுதமமுக ஆரம்பமே இப்படியா? காப்பாற்ற போகும் அந்த "பெரிய கை" யார் -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
அதிமுக 80 தொகுதிகளில் டெபாசிட் இழக்குமாம்! லயோலா கணிப்பில் பகீர்! எடப்பாடிக்கு எதிராக பூகம்பம் ரெடி? -
வடக்கே வன்னியர்..தெற்கே தேவர்! 3 பேருக்கு செக்.. அய்யா ராமதாஸை வைத்து சின்னம்மா சசிகலா போடும் கணக்கு -
Kaliyammal: காளியம்மாள் மயிலாடுதுறை தொகுதியில் போட்டி? அதிமுகவில் சேர்ந்ததும் எடப்பாடி போடும் கணக்கு.. பின்னணி -
அதிமுக சார்பில் தேர்தலில் களமிறங்கும் காளியம்மாள்? 3 முறை போட்டியிட்டபோது என்ன ரிசல்ட்? -
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
அடிச்சு ஓட விட்ருவோம் பாரு! அதிமுகவுக்கு ஜம்ப் ஆன காளியம்மாள் யார்? மீனவ பெண்ணின் "வேங்கை மகன்" மூவ் -
ஓபிஎஸ்ஸின் Ex ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மர் எம்பிக்கு பதவி! அப்போ காளியம்மாளுக்கு?












Click it and Unblock the Notifications