திமுகவுக்கு வருகிறது செக்.. 2 காவல் அதிகாரிகளை வைத்து.. அதிமுக தீட்டும் அதிரடி திட்டம்!
ஜாபர் சேட் சென்னை மாநகர கமிஷனராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: காக்கி சட்டை புள்ளிகளை வைத்து ஒரே கல்லில் எடப்பாடியார் 2 மாங்காய் அடிக்க போகிறார் என்பதுதான் பரபரப்பான பேச்சாக உள்ளது.
தமிழக போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதனின் அதிரடிகளை மக்கள் கண்கூட பார்த்து வருகிறோம். ஒருகட்டத்தில் சென்னை என்றாலே கொலை நகரம் என்ற பெயர் இருந்தது. எங்கு திரும்பினாலும் வழிப்பறி, கொள்ளை போன்றவை அசால்ட்டாக நடந்து வந்தது.
இதற்கெல்லாம் ஆங்காங்கே சிசிடிவி காமிராவை வைத்தால்தான் சரிப்படும் என்று முடிவெடுத்து, அதன்படியே செயல்படுத்தியவர் விஸ்வநாதன்.

செயல்பாடுகள்
நாட்டிலேயே, அதிக சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ள ஒரே நகரம் சென்னைதான். பெருமளவு குற்றச் செயல்கள் அனைத்தும் இந்த சிசிடிவி காமிராக்கள் மூலம் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதை மக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அதனால்தான் விஸ்வநாதனின் செயல்பாடுகளை பாராட்டி ஆளுமை விருது நேற்று முதல்வர் வழங்கி பாராட்டினார்.

அதிமுக அரசு
இது ஒரு பக்கம் இருந்தாலும், விஸ்வநாதனை இன்னும் பெட்டராக பயன்படுத்தி கொள்ளலாமா என்று முதல்வர் தரப்பு யூகிக்கிறதாம். பணி ரீதியாக விஸ்வநாதனை எந்த குறையும் சொல்ல முடியாவிட்டாலும், அவரது சேவையை மேலும் விரிவாக்க அதிமுக அரசு கருதுகிறதாம்.

ஜாபர் சேட்
அதனால்தான் விஸ்வநாதனை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கலாமா... ஒருவேளை விஸ்வநாதனுக்கு இந்த பொறுப்பு கொடுத்துவிட்டால், சிபிசிஐடி டிஜிபியாக இருக்கும் ஜாபர் சேட்டை சென்னை மாநகர கமிஷனராக நியமித்துவிடலாமா என்ற பரபரப்பு ஆலோசனை நடப்பதாக சொல்கிறார்கள். ஏனென்றால், இப்போதைக்கு திமுகவுக்கு ஒரு அழுத்தம் தருவது என்பது அதிமுகவின் கட்டாயமாக உள்ளது. பலம் பொருந்தி வரும் திமுகவுக்கு செக் வைக்க நம்பகத்தன்மை வாய்ந்த நபர் தேவை என்பதால்தான் ஜாபர் சேட் பெயர் அடிபடுகிறது.

நெருக்கமானவர்
திமுக ஆட்சிக் காலத்தில் முடிசூடா மன்னனாக இருந்தவர்தான் ஜாபர்சேட். அவர் என்ன நினைப்பாரோ அதை சாதித்துவிடுவார். சுருக்கமாக சொல்ல போனால், ஸ்டாலின், அழகிரி, கனிமொழியையும் தாண்டி கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்லப்பட்டவர். இதுவரை தமிழக காவல்துறை வரலாற்றிலேயே அதிகாரம் மிக்கவர் யாருமே இருந்தது கிடையாது என்ற பெயரையும் பெற்றவர்.

அதிரடி திட்டம்
இப்போது திமுகவுக்கு எதிராக இவர் இருக்கிறார். "திமுக ஆட்சி காலத்தில் என்னென்ன நடந்ததோ எல்லா விஷயமும் என் பாக்கெட்டுக்குள்" என்ற ஒரு விஷயத்தை முன்வைத்து டிஜிபியாகவும் பாஜக மூலமாக கணக்கு போட்டவர் இவர் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. அதனால் திமுகவுக்கு செக் வைக்க இவர்தான் சரியான ஆள் என்பதுதான் அதிமுகவின் கணக்காக உள்ளதாம். ஆக மொத்தம் விஸ்வநாதன் ஒரு பக்கம், ஜாபர் சேட் இன்னொரு பக்கம் என அதிரடி காட்ட அதிமுக திட்டமிட்டு வருகிறதாம்.
-
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications