சிதம்பரம் கோர்ட்டுக்கு சூர்யா வரும்போது ஒரு வன்னியர் உதைத்து ரூ.1லட்சம் வாங்குவார்-பகிரங்க மிரட்டல்
சென்னை: வன்னியர் சங்கம் தொடர்ந்த வழக்கில் சிதம்பரம் நீதிமன்றத்துக்கு நடிகர் சூர்யா வரும் போது ஏதாவது ஒரு வன்னியர் அவரை உதைத்து ரூ1 லட்சம் பரிசு பெறுவார் என ட்விட்டரில் பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்பீம் திரைப்படத்துக்கு எதிராக நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் மற்று அமேசான் நிறுவனம் ஆகியவை மீது வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி வழக்கு தொடர்ந்தார். அவதூறு பரப்புதல், இரு சமூகங்களுக்கு இடையே வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு சிதம்பரம் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது..

சூர்யா கோர்ட்டுக்கு வந்தால்
இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள @Karu_Sathya என்ற நெட்டிசன், வழக்கு வெற்றியோ, தோல்வியோ சிதம்பரம் நீதிமன்றத்திற்கு சூர்யா வரும்போது, ஏதாவது ஒரு வன்னியன் நடிகன் சூர்யாவை உதைத்து விட்டு, 1 இலட்சம் ரூபாயை தட்டிட்டு போக போறான் என பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாமக செயலாளரின் சர்ச்சை அறிவிப்பு
ஜெய்பீம் விவகாரத்துக்காக நடிகர் சூர்யாவை உதைத்தால் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். இது மிகப் பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் வன்முறையை தூண்டும் வகையில் அறிவிப்பு வெளியிட்ட பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

காடுவெட்டி குருவின் மகன்
இதேபோல் மறைந்த வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் மகன் கனலரசனும், 10,000 பேர் ஒன்று திரண்டு சூர்யாவின் வீட்டின் முன்பு நின்றால் அவரால் எதுவும் செய்ய முடியாது. 5 துப்பாக்கி ஏந்திய போலீசால் சூர்யாவை காப்பாற்றி விட முடியாது என கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.
Recommended Video

சூர்யா, ஞானவேலுக்கு குரு மகன் எச்சரிக்கை
மேலும் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காவிட்டால் அவரால் எந்தப் படத்திலும் நடிக்க முடியாது; எந்தப் படமும் எடுக்க முடியாது. இயக்குநர் ஞானவேல் தனது வீட்டை விட்டு வெளியே வர முடியாது எனவும் கனலரசன் எச்சரித்திருந்தார். இதனையடுத்து நடிகர் சூர்யா வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது நீதிமன்றத்துக்கு சூர்யா வந்தால் தாக்குவோம்; உதைப்போம் என சமூக வலைதளங்களில் பகிரங்கமாகவே மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்யக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications