ஜெய் பீம்: சூர்யா மட்டுமல்ல.. ஜோதிகா படங்களையும் திரையிட கூடாது.. ஒன்று திரண்ட பாமக
சென்னை: நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா ஆகியோர் நடித்த திரைப்படங்களை புதுச்சேரியில் எந்த தியேட்டரிலும் வெளியிடக் கூடாது என வலியுறுத்தி தியேட்டர் உரிமையாளர்களிடம் புதுச்சேரி பாட்டாளி மக்கள் கட்சியினர் மனு அளித்தனர்.
Recommended Video
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜோதிகா தயாரிப்பு நிறுவனமான 2 டி தயாரிப்பில் ஜெய் பீம் திரைப்படம் அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியானது.
இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் அதே அளவு எதிர்ப்பையும் பெற்றுள்ளது.
உ.பி. தேர்தல் களத்தில் திருப்பம்: அகிலேஷ் யாதவுடன் கைகோர்க்கும் கேஜ்ரிவால்- உதயமாகும் மெகா கூட்டணி
அக்னி கலசம்
அந்த படத்தில் ஒரு காவல்துறை அதிகாரி பேசும் பொழுது அவர் பின்னால் வன்னியர் சங்கத்தின் அடையாளச் சின்னமான அக்னி கலசம் இருப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்த காட்சி அகற்றப்பட்டாலும் இதுவரை எதிர்ப்பு குறைந்தபாடில்லை.
சூர்யா, ஜோதிகா படங்கள்
இந்த நிலையில் புதுச்சேரி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் புதுவை மாநிலத்தில் உள்ள சுமார் 10 தியேட்டர்களில் சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த திரைப்படங்களை வெளியிடக் கூடாது என வலியுறுத்தி தியேட்டர் உரிமையாளர்களிடம் மனு அளித்தனர்.
ஓடக் கூடாது
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் கணபதி கூறும்பொழுது, வன்னியர்களை மற்ற சாதியினருக்கு எதிர்ப்பாளர்கள் போல் காட்டி மக்கள் மத்தியில் விரோத போக்கை கடைபிடிக்கும் பிரபல நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோரின் திரைப்படங்களை புதுச்சேரியில் எந்த தியேட்டரிலும் வெளியிடக் கூடாது என வலியுறுத்தி மனு கொடுத்திருக்கிறோம். மனுவை பெற்றுக்கொண்ட தியேட்டர் உரிமையாளர்களும், தங்களுக்கு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்து இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
ஓடிடி
சமீப காலமாக ஜோதிகா மற்றும் சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ஓடிடி தளங்களில்தான் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில், சூர்யா மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே சில சில மனக் கசப்புகள் எழுந்து அடங்கியிருந்தன. இப்போது ஜெய்பீம் விஷயத்தை கருத்தில் வைத்து பாமக நேரடியாக சூர்யா, ஜோதிகா படங்களுக்கு எதிராக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.