திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை – எழும்பூர் நீதிமன்றம் அதிரடி
சென்னை: திமுக தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூரத்தி பரபரப்பான கருத்துகளுக்கும், சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார். தற்போது தவெக தலைவர் விஜய் குறித்து வைரலாகி வரும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, முன்பு ஆளுநர் ரவி மற்றும் பாஜக நிர்வாகி குஷ்பூ குறித்து ஆபாசமாக பேசியிருந்தார். இந்த வழக்கில் அவருக்கு 3.3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது [Jail for DMK Sivaji Krishnamurthy].
சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு சிறை
14.06.2023 ஆம் ஆண்டு சென்னை கொடுங்கையூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார். அப்போது அவர் ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவருமான நடிகை குஷ்பூ குறித்து ஆபாசமாக பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு கண்டனங்கள் எழுந்தன.

இதுதொடர்பாக காவல்துறையினர் அவதூறு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று அதில் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள், 3 மாதங்கங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
விரைவில் கைது
மேலும் அவருக்கு ரூ.20,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீடு செய்வதற்காக சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு நீதிமன்றம் ஒரு மாதம் அவகாசம் வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications