Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ஜனநாயகன்' பட தணிக்கை சான்று.. வழக்கை வாபஸ் பெறுகிறது தயாரிப்பு நிறுவனம்! வெளியான அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் திரைப்படம் ஜன.9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த திரைப்படம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்தது. இதனையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கே.வி.என்.புரொடெக்ஷன் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன், இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது.

Jana Nayagan Vijay High Court

ஜனநாயகன் சர்ச்சை

மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், ஜனநாயகன் திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறி, கடந்த டிச. 22 அன்று திரைப்படத்திற்கு யு/ஏ (16+) சான்றிதழ் வழங்கியது. தயாரிப்பாளரும் அதை ஏற்றுக்கொண்டனர். ஆனால், பாதுகாப்புப் படைகளை எதிர்மறையாக சித்தரிப்பது மற்றும் மத உணர்வுகளை புண்படுத்துவது போல காட்சிகள் படத்தில் இடம்பெற்று இருக்கிறது என்று கூறி, ஜனவரி 5 அன்று தணிக்கை வாரியம் படத்தை திருத்தக்குழுவுக்கு அனுப்பியது.

வெளியீடு தாமதம்

இது வெளியீட்டை தாமதப்படுத்தியது. ரூ.500 கோடியில் உருவான இந்த திரைப்படம், பொங்கல் ரேசில் பங்கேற்க வேண்டும் என்று யோசித்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ், உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, ஜனவரி 9 அன்று முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, வாரியம் 2 வாரங்களுக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜனநாயகன் வழக்கு

ஆனால், வாரியம் அப்பீல் செய்து ஸ்டே பெற்றது. தயாரிப்பாளர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர். ஆனால், உயர் நீதிமன்றத்தையே நாட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இப்படி இருக்கையில் ஜன.27 அன்று, உயர் நீதிமன்ற இரட்டை நீதிபதிகள் அமர்வு ஒற்றை நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. தணிக்கை வாரியத்துக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி, வழக்கை புதிதாக விசாரிக்க உத்தரவிட்டது. இது வெளியீட்டை மேலும் தாமதப்படுத்தியது. இப்படி இருக்கையில்தான் வழக்கை திரும்ப பெறுவதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

காரணம் என்ன?

வழக்கு காரணமாக பட வெளியீடு தள்ளிப்போவதே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை வாரியத்துடனான சட்டப் போராட்டத்தால் அந்த வாய்ப்பு நழுவிவிட்டது. நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடுவது படத்தை இன்னும் காலதாமதப்படுத்தும் எனத் தயாரிப்புத் தரப்பு கருதுகிறது.

ரசிகர்கள் கோரிக்கை

நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரித்தால் அதற்குப் பல வாரங்கள் ஆகலாம். அதற்குப் பதிலாக, தணிக்கை வாரியத்தின் மேல் முறையீட்டு குழு முன்பாகச் சென்றால் 10 முதல் 20 நாட்களுக்குள் தணிக்கைச் சான்றிதழைப் பெற்றுவிட முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்.

இதற்கிடையில், சோசியல் மீடியாக்களில்.. விஜய் ரசிகர்கள், "சட்டப் போராட்டத்தைத் தவிர்த்துவிட்டு, தணிக்கை வாரிய நடைமுறைகளைப் பின்பற்றி படத்தை விரைவில் வெளியிடுங்கள்" என்று தயாரிப்பாளர்களுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவேதான் தயாரிப்பு நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுக்க இருக்கிறது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+