500 மதுக்கடைகளை மூடியது மட்டும் போதாது! தமிழகம் மதுவில்லா மாநிலமாக வரணும்! ஜவாஹிருல்லா ஆவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 500 மதுக்கடைகளை மூடினால் மட்டும் போதாது, தமிழகம் மதுவில்லா மாநிலமாகத் திகழவேண்டும் என்ற ஆசையை பகிர்ந்துள்ளார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா.

பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக வாழ்விரிமைக் கட்சியை போலவே மனிதநேய மக்கள் கட்சியும் பூரண மதுவிலக்கு கொள்கையை பின்பற்றி வரும் அரசியல் கட்சியாகும். இதனிடையே மதுக்கடைகள் மூடல் குறித்து ஜவாஹிருல்லா விடுத்துள்ள பதிவு வருமாறு;

Jawahirullah eagerly says, Tamil Nadu should become a alcohol-free state!

''தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என சட்டபேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 500 மதுக்கடைகளைக் கண்டறிந்து அதனை மூட அரசாணைவெளியிடப்பட்டது.

அந்த அரசாணையின் அடிப்படையில் 500 மதுக்கடைகளை மூடி தமிழ்நாடு அரசு உத்தரவு வெளியிட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. இதற்கு வழிவகுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது மூடப்பட்டுள்ள 500 மதுக்கடைகள் மட்டுமின்றி தமிழகம் மதுவில்லா மாநிலமாகத் திகழ தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மதுக்கடைகள் மூடப்படும் பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டால் அந்த விற்பனையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்''.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+