எந்தன் கண்ணாளன் கரை நோக்கி போகிறான்.. மறைந்த லதா மங்கேஷ்கரின் பாடலை பாடிய முன்னாள் அமைச்சர்
சென்னை: எந்தன் கண்ணாளன் கரை நோக்கி போகிறான் என்ற லதா மங்கேஷ்கரின் பாடலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாடினார்.
Recommended Video
சென்னையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில் "இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் மறைவு என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அனைவருக்குமே மிகப்பெரிய இழப்பு.

நானும் ரசிகர்தான்
நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகர். அந்த வகையில், அவருடைய மரணம் எனக்கும் மிகப்பெரிய இழப்புதான். தன்னுடைய குரலால் 36 மொழிகளில் அனைவரையும் மயங்க வைத்தவர் லதா மங்கேஷ்கர். அவருடைய இசைத் திறமையை பாராட்டி பாரத ரத்னா பட்டம், ராஜ்யசபா உறுப்பினர் பதவியை மத்திய அரசு அவருக்கு வழங்கியது.

எந்தன் கண்ணாளன்
பல்வேறு மொழிகளில் அவர் எத்தனையோ பாடல்கள் பாடியிருந்தாலும் எனக்கு பிடித்த பாடல் 'எந்தன் கண்ணாளன் கரை நோக்கி போகிறான்...' என்ற பாடல்தான். 1956இல் திலீப்குமார் நடிப்பில் வெளியான வண்ணரதம் என்ற டப்பிங் படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் படகில் செல்வார்கள். அப்போது 'எந்தன் கண்ணாளன் கரை நோக்கி போகிறான்... நதியே மெல்ல போ...' என்று மெலடி பாடல் வரும்.

ரசனை
அந்த பாடலை யூடியூபில் சென்று பாருங்கள். பாடலைக் கேட்டவுடன் மயங்கிவிடுவீர்கள். அவ்வளவு ரசனையுடன் ஆத்மார்த்தமாக லதா மங்கேஷ்கர் பாடியிருப்பார். காலத்தால் அழிக்க முடியாத அளவிற்கு அந்த பாடல் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவருடைய மறைவு மிகப்பெரிய துரதிர்ஷ்டம். அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆயிரம் ரூபாய் எங்கே
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப் போவதாக சொல்லி பெண்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டு இதுவரை அதுபற்றி மூச்சே விடாமல் இருப்பதால் விடியல் ஆட்சிக்கு முடிவுரை எழுத பெண்கள் தயாராகி விட்டார்கள். நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி வழங்கிவிட்டு இப்போது அதற்குள் ஆயிரம் விதிமுறைகள் உருவாக்கியிருப்பதும் திமுக மீது உச்சக்கட்ட கோபத்தை உண்டாக்கியுள்ளத" என்றார்.












Click it and Unblock the Notifications