விஜய் மேடை.. மிஸ் செய்த திருமா.. கருணாநிதியாக இருந்தால்... மூத்த பத்திரிகையாளர் கா.சு. துரையரசு
சென்னை: அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யுடன் ஒரே மேடையில் பங்கேற்காமல் தவிர்த்திருந்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். நடிகர் விஜய் இது குறித்து பேசுகையில், திமுக அழுத்தம் தந்தது என விமர்சித்தார். இதற்கு திமுக தரப்பில் கடுமையான பதிலடி தரப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் மூத்த பத்திரிகையாளர் கா.சு.துரையரசு தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: விகடன் நடத்திய நூல் வெளியீட்டு நிகழ்வில் திருமா அவர்கள் கலந்துகொள்வது எப்படி அரசியல் பேசுபொருள் ஆனதோ, அதேபோல அவர் கலந்துகொள்ளாமல் போனதும் பேசுபொருள் ஆகியிருக்கிறது. இதுகுறித்த ஆதங்கத்தை அவர் மிக நீண்ட கடிதமாகக் கொட்டித் தீர்த்திருக்கிறார். அது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஒரு அனுபவம் பெற்ற கொள்கைத்தலைவர் இப்படி எதிர்வினை ஆற்றியிருக்கக்கூடாது.

இந்த இடத்தில் கலைஞரை வைத்து யோசித்துப்பாருங்கள். புதிதாகக் கட்சி தொடங்கிய விஜய் வருகிறாரே...அவருடன் மேடையைப் பகிர்ந்துகொண்டால் அரசியல் ரீதியில் என்ன ஆகுமோ என்றெல்லாம் அவர் யோசித்திருக்கவே மாட்டார். எவர் வழங்க, எவர் பெறுகிறார் என்பதும் அவருக்கு ஒரு பொருட்டல்ல என்பதுபோலவே நடந்துகொண்டிருப்பார் (ஆனால் அதற்கு என்ன ஊசி போடவேண்டுமென்று அவருக்குத்தெரியும்).

கிடைத்த மேடையைத் தனதாக்கிக்கொள்ளும் கலை, கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்குக் கைவந்த ஒன்றாகும். போட்டி என்று வந்துவிட்டால் துள்ளிக்குதிப்பவர் அவர். ’பாசிசமும் பாயசமும்’ என்ற பெயரில் ஒரு வரலாற்றுப் பேருரையை விகடன் மேடையில் அங்கு நிகழ்த்தியிருப்பார். ஐரோப்பாவில் பாசிசம் என்ன செய்தது என்று தொடங்கி, அகநானூறு, புறநானூற்றில் , சங்க இலக்கியங்களில் வெறுப்பு அரசியல் எத்தகையை பங்கை வகித்தது என்று முழங்கியிருப்பார். சமகாலத்தில் பாசிசத்தின் நவீன வடிவம் எப்படிப் பரிணமித்தது என்று படம்போட்டு விளக்கியிருப்பார்.
இன்றைய சூழலில் பாசிச, நாஜி கோட்பாடுகளின் நவீன வடிவங்களை எப்படி இனம்கண்டு எதிர்கொள்வது என்று அரசியலின் புதிய வரவுகளுக்குப் பாடம் எடுத்திருப்பார். விஜய் போன்ற இளம் அரசியல்வாதிகளுக்கு அது நிச்சயம் உதவிகரமாக இருந்திருக்கும். வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில் கோட்டை விட்டுவிட்டீர்களே திருமா!. இவ்வாறு மூத்த பத்திரிகையாளர் கா.சு. துரையரசு தெரிவித்துள்ளார்.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள்












Click it and Unblock the Notifications