ஏ.ஆர். முருகதாஸிடம் கெஞ்சியும் உடன்படவில்லை.. ராஜினாமா கடிதத்தில் கே.பாக்யராஜ் பகீர்!
Recommended Video

சென்னை : தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸிடம் கெஞ்சிக் கேட்டும் உடன்படாததாலேயே சர்கார் கதையை வெளியே சொல்ல நேர்ந்ததாகவும் இதனால் பல அசவுகரியங்களை சந்தித்ததாகவும் பாக்யராஜ் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜயின் மெர்சல் படத்திற்கு அதில் இருந்த வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது என்று பார்த்தால், சர்கார் படத்தில் கதை யாருடையது என்பதிலேயே சர்ச்சை ஏற்பட்டது. சர்கார் கதை தான் ஏற்கனவே பதிவு செய்துள்ள செங்கோல் கதை என்று உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தை நாடினார்.
இந்த விவகாரத்தில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் தலையிட்டு உண்மை என்ன என்பதை ஆராய்ந்து நடுநிலையான முடிவை அறிவித்தார். அதில் சர்கார் கதையும் வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதையும் ஒன்றே என்று அவர் கூறி இருந்தார். இந்நிலையில் வருண் ராஜேந்திரனிடம் சர்கார் படக்குழு சமரசம் பேசியதையடுத்து வழக்கு வாபஸ் பெற்று தீபாவளிக்கு சர்கார் வெளியிடுவதற்கு இருந்த தடை நீங்கியது.
[எழுத்தாளனுக்குரிய உரிமையை வாங்கிக் கொடுத்தது மகிழ்ச்சி.. கே.பாக்யராஜ்]

நடுநிலை கே.பாக்யராஜ்
இந்த விவகாரத்தில் நடுநிலையோடு உண்மையை சரியான முறையில் வெளிக்கொண்டு வந்த கே.பாக்யராஜிற்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் திடீர் திருப்பமாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்த கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார்.

நியாயமாக எடுத்த முடிவு
அவர் அளித்துள்ள ராஜினாமா கடிதத்தில், சர்கார் படம் சம்பந்தமா சங்கத்திற்கு வந்த புகாரை பரிசீலித்து சம்பந்தப்பட்ட உறுப்பினரிடம் உண்மை இருப்பதால் அவருக்கு நியாயம் வழங்கினேன். பொறுப்பில் இருக்கும் முக்கியமானவங்க எல்லோரையும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்து நல்லபடியாக நியாயாமா அதை செயல்படுத்தவும் முடிந்தது.

அசவுகரியத்தை சொல்ல விரும்பல
ஆனால் இந்த விவகாரத்தால் பல அசவுகரியங்களை சந்தித்தேன். அதுக்கு முக்கிய காரணமாக நான் நினைக்கிறது தேர்தலில் நின்று தலைவர் பதவிக்கு வராமல் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வந்ததே என நினைக்கிறேன். எனவே எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முறையா நின்று மெஜாரிட்டி ஓட்டோட ஜெயிச்சு பொறுப்பை ஏத்துக்கிட்டு தொடர்ந்து கடமையோட செயல்படுவேன் என்று பாக்யராஜ் குறிப்பிட்டுள்ளார்.
|
உடன்படாத முருகதாஸ்
மேலும் தனக்கு நேர்ந்த அசவுகரியங்கள் என்ன, ஒழுங்கீனங்கள் என்ன என்பதை சங்க நலன் கருதியும் நற்பெயர் கருதியும் வெளியே சொல்ல விரும்பல என்று பாக்யராஜ் தெரிவித்துள்ளார். முருகதாஸிடம் நான் கெஞ்சியும் அவர் உடன்படவில்லை. இதனாலேயே பெரிய நிறுவனமான சன்பிக்சர்ஸ்ன் கதையை வெளியே சொல்ல நேர்ந்தது. எனினும் தவறை உணர்ந்து சம்பந்தப்பட்ட சன் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கோருகிறேன் என்றும் பாக்யராஜ் குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications